...

8 views

பயணம்
மலையோடு மழைக்காற்று ஜன்னல் கண்ணாடியைத் தாண்டி கண்ணை சிறை பிடிக்க ஆற்று நீரோடைச் சத்தத்தில் வாகண இரைச்சல் மறைந்த படி
இடையூறு இல்லா இயற்கையை ரசித்துக் கொண்டு நீண்ட தூரம் பயணித்திட ஏறிய எனக்கு எல்லை போடுகிறார்..
பேரூந்தின் நடத்துனர்.. பயணப் பற்றுச்சீட்டின் விலாசம் கேட்டு..
நானும் யாது செய்வேன்..
நிற்கும் இடத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றதும் கொஞ்சம் அவரின் பார்வை என்னை கூர்ந்து பார்க்கிறது என் ஆரோக்கியத்தின் மீது கொஞ்சம் சந்தேகம் கலந்தபடி..
© shimla SeeniMohammed