...

5 views

அன்புள்ள காதலி
உன்னிடம் நான் தொலைந்து போனது உண்மை தான்!
இத்தனை நாட்கள் மறைத்து வைத்து இருந்தேன் இந்த காதலை
உன்னிடம் கூற அச்சம் சொல்ல தெரியவில்லை ஆனாலும் உன்னிடன் சொல்கிறேன்!
எத்தனை வருடம் கடந்து இருப்பேன் எத்தனை பெண்களை கடந்து இருப்பேன் ஆனாலும் காதல் உன் மீது ஏனடி,
புரியாத புதிராக இருக்க
புரியாமல் தவிக்கும் என் இதயம்,
என் தொலைதூரத்து அழகியே
உன் இரு விழியில் விழுந்த நாட்களில் தான் என்னை மொத்தமாய் நான் மறந்தேன்
இமை மூடி நான் இருக்க இதயம் முழுக்க நீ இருக்கிறாய் இது என்ன மாயம்! இந்த கடிதம் எழுத எத்தனித்த பொழுது ஏனோ வார்த்தைகள் மறந்தேன் கவியே!
படைத்த பிரம்மன் கூட மறந்து போவான் உன்னை வர்ணிக்கும் வரியை! நானும் மானிடன் அழகில் மயங்கி இதழில் மொத்தமாய் கவிழ்ந்து உன்னிடம் சரண் அடைந்தேன் அரசியே!
என்னை ஏற்று கொள் என் இறைவியே!
© அருள்மொழி வேந்தன்