...

6 views

ஞான ஸ்நானம்
பெற்றவைகளையும்
இழந்தவைகளையும்
கணக்கிடும்போது_

காலம் கடந்து பெறப்படும் ஞானங்களால்
இறந்த காலங்களின்
இழப்புகளை ஈடு செய்ய முடிவதில்லை

எதிர்கால ஏமாற்றங்களை வேண்டுமானால்
தவிர்த்துக் கொள்ள முடிகிறது

அவன்கள் பார்வையில்_
தேவதைகளாயிருந்து கொற்றவைகளாய் மாறிய
மனைவிகள்;

அவள்கள் பார்வையில்_
தேவன்களாயிருந்து
வேதாளங்களாய் மாறிய
கணவன்கள்_
எனும்போது

காலங்கடந்து பெறப்படும்
ஞானங்களில்
கல்யாணம் வேண்டாம்
என்பதூஉம் ஒன்று

கற்பென்றும் மாண்பென்றும்
Possessiveness திணிப்பில்_
கற்காலங்களின்
கல்யாணமற்ற கலவிகளில்
விருத்தியான சந்ததிகளின்
தொடர்ச்சிதானே இன்றுள்ளவர்கள்?


© iAmRangz