...

7 views

Love failure
காதலெனும் காட்டினிலே கை காட்டிச் சென்றவளே !
மோதலேனும் என் மனத்தினில் மோகனமாய் உருக் கொண்டவளே - நீ
அளித்த வேதனையில் என் கவி போதனையாய் மாறுதடி!- தீ
அளிக்கும் வலி கூட சகியே ! துச்சம் என தோணுதடி !

அன்பு எனும் ஆழியிலே அனல் பந்தம் தாங்கி வந்தவளே !
வன்பு எனும் வாளி கொண்டு எனை வதைத்ததுதான் ஏனோடி !
சாந்தமான என் சந்தமெல்லாம் சீற்றம் கொண்டு சீறுவதேன் !- என் உயிர்
காந்தமான காதலியே உன் கவனம் கலை இழப்பது ஏன் ?
-இளமாறன்(Abishen)
© shane.creations