நெற்கதிரவன் குரல்!
தைத்திருநாள் ஆம்!
தை முதல்நாள்
தைத்திருநாள்..
உடலையும் உணர்வுகளையும்
எனுக்காக வருத்தியவனின்
திருநாள்...
மகளின் வளர்ச்சியைச் சற்றும்
இரசித்திடாமல்....என்னையே
இரசித்தவளின் திருநாள்...
நாற்றுவிட்ட நாள்முதல்
திங்கள் எண்ணி எண்ணி...
பசுமை பருவம் வந்ததும் ...
எம்பசுமையில்
பசிமறந்தவரின் திருநாள் !
நான் செம்மையாகி சிலருக்கு !
நான் வெறும் கதிராகி சிலருக்கு!
வறுமை வெறுமை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில் !
வளமை செம்மை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில்!
தைத்திருநாள் திருநாள் தான்
மற்றவரிடத்தில்...
இரசித்தவனிடத்தில்
வளர்த்தவனிடத்தில் ....இலவச அரிசியில் !
(நெற்கதிரவன் கதறிஅழுகிறான்)
எம்மை இரசித்துவளர்த்தவன்
வளர்த்திட மட்டுமே கற்றானோ ?
எம்மை இருசித்திட மறந்தானோ ?
மறக்கவைத்தாரோ ?
© Nuradhaag
#உங்களின்குரல்#மனதின்குரல்
#வரிகளில் வலிகள்
தை முதல்நாள்
தைத்திருநாள்..
உடலையும் உணர்வுகளையும்
எனுக்காக வருத்தியவனின்
திருநாள்...
மகளின் வளர்ச்சியைச் சற்றும்
இரசித்திடாமல்....என்னையே
இரசித்தவளின் திருநாள்...
நாற்றுவிட்ட நாள்முதல்
திங்கள் எண்ணி எண்ணி...
பசுமை பருவம் வந்ததும் ...
எம்பசுமையில்
பசிமறந்தவரின் திருநாள் !
நான் செம்மையாகி சிலருக்கு !
நான் வெறும் கதிராகி சிலருக்கு!
வறுமை வெறுமை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில் !
வளமை செம்மை எல்லாம்
எந்தன்
ஒற்றை வளர்ச்சியில்!
தைத்திருநாள் திருநாள் தான்
மற்றவரிடத்தில்...
இரசித்தவனிடத்தில்
வளர்த்தவனிடத்தில் ....இலவச அரிசியில் !
(நெற்கதிரவன் கதறிஅழுகிறான்)
எம்மை இரசித்துவளர்த்தவன்
வளர்த்திட மட்டுமே கற்றானோ ?
எம்மை இருசித்திட மறந்தானோ ?
மறக்கவைத்தாரோ ?
© Nuradhaag
#உங்களின்குரல்#மனதின்குரல்
#வரிகளில் வலிகள்