...

8 views

ஆசை!
ஊடலின் போதும்
கூடலின் போதும்
நீ வேண்டும்!
தினம் விடியும்
காலை பொழுதில்
உன் முகத்தோடு
என் முகமனைத்து
இமைகளது
விழிக்க வேண்டும்!
என் நெற்றியில்
நீ வைக்கும் செந்தூரம்
மின்னலாய் மின்ன
வேண்டும்!
உனையென்னி
குறையாத புன்னகையில்
நாணம் கொஞ்சம் கூட
வேண்டும்!
மனங்கோர்து கடற்கறையில்
நடைப் போட வேண்டும்!
உன் தோள் சாயந்து
சிறு முத்த சுவடுகளை
காதலோடு உன்
மார்பில் பதிக்க
வேண்டும்!
கொஞ்சி நீ போட நானும்
மருதாணியும் வெட்கத்தில்
சிவந்திட வேண்டும்!
மழை தேடி நானாட
குடையாய் நீ
அனைத்திட வேண்டும்!
தெருக்கள் அல்லாது
ஊரும் நம்மைக் கண்டு
நெகிழ்ந்திட வேண்டும்!
பொழுது மறைவது
அறியாமல் நினைவுகளை
நாம் பகிர்ந்திட வேண்டும்!
வரும் பல்லாண்டு பிறந்த நாட்களை ஒன்றாக
கொண்டாடி கொண்டாட வேண்டும்!
வாழ்வ்வது முடிந்தாலும்
நம் காதல்லது நிறையாகி
பெருக்கெடுக்க வேண்டும்!!


© சீதளா செ


#WritcoQuote #writco #wrticopoem #tamilkavithai #Love&love💞 #relationshipquotes