...

8 views

அவளவன்.. அவள்
மோகக் கூட்டில்
இவள் வளர்த்த யாகத்தின்
அழகான பெயர்
அந்தரங்க ஏக்கங்கள்..

அணிந்து கொண்ட சேலையில்
மேலுமொரு நூல் நெய்தாள்
அதனுடன் அவளவனை
சேர்த்தே உடுத்தினாள்..

நழுவும் போதெல்லாம்
விரல் தாங்கி கொண்டால்
விழி மூடிக் கொண்டாள்..

நிலவைப் போல தன்னை
பாவித்தாள்
வெளிச்சம் போலே அவளவனை
கலந்திடச் சொன்னாள்..

சுழலும் பூமியின் வேகமாய் காதல்
ஏனோ வாழ்வை புரட்டிப்போட்டது
அவள் நாணத்திற்கெல்லாம் வாழ்வளிக்க..

நெய்த சேலையில் அவளவன்
மலராய் அமர
இவள் மலர்ந்தே மணம் தந்தாள்..

காதலின் நறுமணத்தை
கவிப்பாட அந்த இரவும் நிலவும் சாட்சி..

© kamal
#erotica #poem #Love&love