...

10 views

நமக்கு கிடைத்த வாழ்க்கை

உண்மை நிகழ்வு


நமக்கு கிடைத்த இந்த வாழ்க்கையை நினைத்து பார்த்தால்......."நாம் இறைவனுக்கு நன்றி மட்டுமே சொல்லுவோம்"

எங்கள் வீட்டின் அருகில் நிறைய வேப்பமரங்கள் உண்டு.. தற்போது வேப்பம்பழங்கள் பழுத்து உதிரக்கூடிய பருவம்... படத்தில் உள்ள இந்த பாட்டிக்கு 65- 70 வயது இருக்கும். தினம் காலை 7 மணிக்கெல்லாம் வந்து விடுவார் . ஒரு சின்ன பை. ஒரு பாட்டிலில் குடிக்க தண்ணீர். 7 மணிக்கு குனிந்து ( படத்தில் உள்ள மாதிரி) வேப்பங்கனிகளை எடுக்க ஆரம்பித்தால். கிட்டத்தட்ட 11 மணிவரை இதே நிலையில் தான் இருப்பார். ஒரு படி வேப்பம்விதைகளை 20-25 ரூபாய்க்கு எண்ணை எடுப்பவர்களிடம் கொடுப்பாராம். கிட்டத்தட்ட 4-5 மணிநேர உழைப்பு. 25 ரூபாய்க்காக... நினைக்கையில் மிகவும் வருத்தமாக தான் இருந்தது.. வீட்டின் துடைப்பம் சிறிது கட்டையானால் கூட குனிந்து பெருக்க முடியவில்லை. அவரை மாதிரி குனிந்து எல்லாம் கோலம் போட்டதே இல்லை நமக்கு வயதோ அவரை விட ஒன்னரை மடங்கு குறைவு..... இவரைப்போல வாழ்பவர்கள் இன்னும் நிறைய பேர் உள்ளனர்.......இதையெல்லாம் நினைக்கும் போது.....
நாம் வாழும் வாழ்கையை கொண்டாட விட்டாலும் பரவாயில்லை......
குறை கூறாமல் இருப்போம்....
இந்த பாட்டியின் வயதில் நாம் எப்படி இருப்போம் என நினைதது பார்த்தால்
இறைவனுக்கு நன்றி மட்டுமே கூறுவோம்🙏🙏. கடந்த சில நாட்களில் என்னை மிகவும் பாதித்த நிகழ்வு...... உங்களோடு பகிர நினைத்தேன்....பொறுமையுடன் படித்தற்க்கு மிக்க நன்றி ... மகாசுந்தர்...