...

4 views

பெண்
வேதங்கள் சொல்லியது "வேதமே
நீ தானே பெண்ணே!"

கல்லை சிற்பம் ஆக்கும் சிற்பி சொன்னான் "நான் செதுக்கிய சிற்பங்களே உன்னைக் கண்டு பொறாமை கொள்ளும்"

பூ சொன்னது "என்னுடைய தங்கை நீ தானே"

வீரம் சொன்னது "என்னுடைய மறுபிறவி நீ மட்டும் தான்!"

பாசம் சொன்னது "என்னுடைய மறுகுழந்தை நீ தானம்மா!"

புன்னகை சொன்னது "என்னுடைய ஊற்றே நீ தானே!"

விதி சொன்னது "தோற்றது உன்னிடம் மட்டும் தான் பெண்ணே!"

மனிதன் சொன்னான் "ஒன்றுக்கும் உதவாத பிணமே நீ தான் "
© குந்தவை