...

1 views

கனவு

எத்தனை நாள் தான்
வீழ்ந்தே கிடப்பது..
எப்படியும்
விருட்சமாகி
விட வேண்டும்..
அதுவும்
ஆற்றங்கரையில்
ஆயிரம்
கிளைகளைப் பரப்பி
ஒவ்வொரு கிளையிலும்
ஓராயிரம்
பறவைகளை நிரப்பி
பெரும் விருட்சம்
ஆகிவிட வேண்டும்..
காத்திருந்தேன்..
காத்திருந்தேன்..
பொறுமையோடு காத்திருந்தேன்.. ஆற்றுக்கு
இடம்பெயர வேண்டும்
அல்லவா..
அந்த நாளும் வந்தது
அடை மழை அடித்து பெய்தது..
கரை புரண்டு ஓடும்
வெள்ளத்தில்
நானும்
அடித்துச் செல்லப்படுகிறேன்
முகமெல்லாம்
சந்தோஷ நுரைகளோடு
ஆற்றை நோக்கி!
© VIGNU GHOUSIKA