...

1 views

பூக்கள்
சில அழகான தருணங்களை
இரசனையோடு
வாழ்ந்துவிடுவதற்கு அவற்றிற்கும்
உரிமைகள் உண்டு

அவை பூக்கள்தான்
நாளை உதிர்ந்து மரணித்து
போய்விடும்தான் ஆனால்
இருக்கும்வரையில் அந்த மரத்தின்
பாதுகாப்பிலும்
அந்த பட்டாம்பூச்சியின் பேரன்பிலும்
வாழ்ந்துவிட்டு போகட்டுமே

எத்தனை காலம் வாழவேண்டும்
என்பவை எல்லாம் அதன்
உரிமைகள் மாத்திரம்தானே
இதில் அவை பூக்கள் என்ற ஒரே
காரணத்திற்காக
பறித்துக்கொள்வதெல்லாம்
எந்த வகையில் நியாயம்

தனக்கான வாழ்வினை
முழுதாக வாழ்ந்து மரணிக்க
பூக்களிற்கும் உரிமை நிச்சயம் உண்டு

அவைகளாவது சுதந்திரமாக
அவைகளாகவே வாழ்ந்து
விட்டுப்போக அனுமதிக்கலாமே.

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran