...

1 views

வெறுமை
அது வெறும் வெறுமைகள்
மாத்திரமல்ல....

ஒரு மரணவீட்டில் கழுவி ஊற்றிய
நீரோடு விரவிக்கிடக்கும் ஓர் பாரிய வெறுமை....

அனைத்தையும்
தாங்கிக்கொள்ளலாமென்ற நம் தைரியங்களைக்கூட அசைத்துப்பார்க்கும் அந்த வெறுமைகள் நம்மை
நிச்சயம் மரத்துப்போக செய்யவைக்கும்........

தூக்கம் தொலைத்த இரவுகளாய்......
துக்கம் தேக்கிய விடியல்களாய்.....
ஒவ்வொரு நாட்களையும் நரகமாய்
நகர்ந்து செல்லப்பணிக்கும் அந்த
வெறுமைகளைத்தாண்டியும் ஒரு
வாழ்க்கை நமக்கு இருக்கிறதுதான்

ஆனால் அதனை உணர்ந்து
கொள்வதற்குத்தான் நம்மை
அந்த வெறுமைகளை இலகுவாக அனுமதித்து விடுவதில்லை.....

வாழ்க்கையில் நாம் இழப்பவைகள்
ஏதோ ஒரு வகையில்
நம்மிடமே வந்து
சேர்த்துவிடுமென்ற நம்பிக்கைகளை
எப்பொழுதும் இழந்து விடாதீர்கள்....

#இசைவிழிசந்திரன்.
© Isaivily chanthiran