...

13 views

காதல் சொல்ல வந்தேன்
நீ அழகியா
இல்லை
அழகின் சதியா?!

என்னை நீ கடந்து சென்றாலும்
உன்னை நான் கடந்து சென்றாலும்
முதலில் தேங்கி நின்று
பின்பு ஏங்கி நிற்கிறேனே
இது உன் அழகின் சதியா?

உனது ஆடைகளில் நிறம்
உன் முகத்தில் பட்டு நிறம் மாற
நிறம் மாறும் பூக்களை
தினம் தினம் பார்க்கிறேனே
அதுவும் உன் அழகின் சதியா?!

உன்னை பார்த்த நொடியில்
விழிகளை விரித்து பார்க்கும் என்னால்
உதடுகளை பிரித்து பேச
முடியாது போவது எதனால்
அதுவும் உன் அழகின் சதியா?!

உன் தன் படங்கள் வேண்டும் என்கிறேனே
எத்தனை முறை பார்த்தாலும்
தீராத தாகத்திற்கு அது கொஞ்சம்
தீர்த்தம் ஆகட்டும் என்பதும்
உன் அழகின் சதியா?!

உறங்கா இரவில் என் திறன் பேசியின்
திரை முடும் நேரத்தை அதிகரித்து
உன் படத்தை வைத்துக்கொண்டு பார்க்கிறேனே
அதுவும் உன் அழகின் சதியா?!

உனது ஆடையின் ஒரு நுணி
உரசிப் போனால் கூட
உன் கையில் நூல் பிடித்து விடும்
பட்டம் ஆகிறேனே அதுவும் உன்
அழகின் சதியா?!

நீ நடந்து சென்று திரும்பும் வரை
உன்னை பார்த்துக் கொண்டிருந்து விட்டு
என் விழிகளை மூடாமலே
அந்த திசையிலேயே நிற்கிறேனே
அதுவும் உன் அழகின் சதியா?!

நீ அழகியா இல்லை என்
உயிரின் பசியா?!

நீ அழகியா இல்லை என்
விழியின் ருசியா?!

நீ அழகியா இல்லை என் நிழல்களின் நிஜமா?!

நீ அழகியா இல்லை என்
தேகத்தின் ஏக்கமா?!

நீ அழகியா இல்லை என்
மௌனத்தின் இசையா?!

நீ அழகியா இல்லை என்
மோகத்தின் சுவையா?!

உன்னை நினைத்தால் எனக்குள்
நட்சத்திரங்கள் பூக்கும்

உன்னை அணைத்தால் எனக்குள்
சொர்க்கம் சிலிர்க்கும்
© kanakannan