15 views
அன்னை
நான் திட்டிய பொழுதும்
நான் கோபித்துக்கொண்ட பொழுதும்
நான் அன்புடன் அணைத்த பொழுதும்
நான் வேடிக்கை செய்த பொழுதும்
அவள் என்றும் ஒரே குணத்தவளாய்
தன் முதிய வயதிலும்
நான் முகம் சுழித்தாலும்
தன் முகத்தின் புன்னகையால்
எனக்கு சேவை செய்கிறாள்
மரணம் ஈன்ற ஜனனத்தில்
என்னை உயிர்ப்பித்தாள்
அவளே என் அன்னை
தன்னை நகைத்தவர்கள் மத்தியில்
நான் நகைப்புடன் வாழ போராடியவள்
என் ஒற்றை அன்பை எதிர்பார்ப்பாக வைத்து
என்னை வளர்த்தவள்
சமூகத்தின் சவால்களுடன்
என் சகாப்தத்தை உருவாக்கிய
சாம்ராஜ்யம் அவள்.
நான் கோபித்துக்கொண்ட பொழுதும்
நான் அன்புடன் அணைத்த பொழுதும்
நான் வேடிக்கை செய்த பொழுதும்
அவள் என்றும் ஒரே குணத்தவளாய்
தன் முதிய வயதிலும்
நான் முகம் சுழித்தாலும்
தன் முகத்தின் புன்னகையால்
எனக்கு சேவை செய்கிறாள்
மரணம் ஈன்ற ஜனனத்தில்
என்னை உயிர்ப்பித்தாள்
அவளே என் அன்னை
தன்னை நகைத்தவர்கள் மத்தியில்
நான் நகைப்புடன் வாழ போராடியவள்
என் ஒற்றை அன்பை எதிர்பார்ப்பாக வைத்து
என்னை வளர்த்தவள்
சமூகத்தின் சவால்களுடன்
என் சகாப்தத்தை உருவாக்கிய
சாம்ராஜ்யம் அவள்.
Related Stories
20 Likes
0
Comments
20 Likes
0
Comments