...

1 views

அவளின் ஜனனம்
மேகமோ அவள்,
தினம் தினம் என் இரு விழி தேடும் அவளின் இரு விழிகள் இங்கே பல கவிதைகள் படைத்த தருணம் பல இருக்க, மீண்டும் மீண்டும் என் பேனா முனையும் என் மனதும் அவளிடம் மட்டுமே தஞ்சம் அடைய பல போர் நடத்தி கொண்டு இருக்க, விழியால் என் மதியை சிதைத்தாய் நீயும், மொழியால் இதழ் வழியால் இமை மூடி வீழ்ந்தேன் நானும்,
மையம் தான் கொண்டாலும்,மழை தென்றலாய் மையல் கொண்டாலும் , கீதமாய் கீதையாய் யார் நீ? யடி பொய்யோ மெய்யோ, நீல வானின் நிலவோ,
நட்சத்திர கூடத்தின் நிழளோ,
நதி நீரின் ஆழமோ,
ஆழ் கடலின் அமைதியோ,
யாரடி நீ மோகினி....
மையல் கொண்ட என் மனதின் ஆழத்தில் அமர்ந்த ஆதினி நீயோ...
என் கவியின் காதலியோ,
என் பிரபஞ்சத்தின் பேரழகியே!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
© அருள்மொழி வேந்தன்