...

1 views

புதுவருடம்
வாழ்க்கை அப்படித்தான் நிறையவே
வலிகளைத்தந்துகொண்டுதான் இருக்கிறது...

எந்த யோசனைகளுமற்றதாய்
உறங்கிப்போகும் பருவங்கள்
மெல்ல மெல்ல நம்மிடமிருந்து
விலகிச்செல்லும்போதே.....எமக்கான
போராட்டங்களும் மெல்ல மெல்ல நம்மை
நெருங்கி வந்திருக்கும்.....

கண்ணீர், துரோகம் ,அவமானம்,
போராட்டாம், காயங்களென இவற்றுக்கு
நடுவில் நம் உண்மையான சிரிப்புக்களை
நாமே தேடிப்பொறுக்கி எடுத்துக்கொள்ளும்
சூழ்நிலையிலெல்லாம்
வாழ நேர்ந்தாலும் ......இந்த வாழ்க்கையை நன்றாகவே
வாழ்கிறோமென்ற ஒரு விம்பத்தை
சுமந்துகொண்டு ஒரு அழகான
முகமூடியோடு சுற்றிக்கொண்டிருப்போம்....

எதற்காக யாருக்கா ஏன் வாழ்கிறோமென்ற
கேள்விகளை தமக்குள்ளே
புதைத்துவிட்டு பரபரப்போடு எழுந்து
கொள்ளும் ஒவ்வொரு விடியலைப்போலதான் பலரிற்கு
நாளைய விடியல்களும் இருக்கும்.....

இனிய புதுவருட வாழ்த்துகளென்ற
வார்த்தைகளை எத்தனைபேர்
இதயத்தில் இனிமை சுமந்து மகிழ்ச்சியாக
உச்சரிக்கபோகிறார்கள்........
போராட்டங்களோடும் காயங்களோடும்
வாழ்பவர்களிடம் அதனை எப்படி
எதிர்பார்க்கவும்முடியும்....

#இசைவிழிசந்திரன்
© Isaivily chanthiran