...

5 views

இரவரசி
இருட்டும் இங்கிதமாய் இசை குரல் நீளும் நீண்ட வரிசையோடு நிற்கும் மலைகளும் அதை சுற்றி ஓடிய மரகதமாய் அடர்ந்து படர்ந்து புல்வெளி சிறு சிறு பூக்களின் விரிந்து கொண்ட இதழ்கள் மூடி தலைசாய்ந்து மடிந்து கொண்டிருந்தது கொல்லும் கொட்டும் பனி தூவிகள் கொள்ளையிடும் கொண்மூ
வும் உடுகளின் உரையாடல் மொழிந்திடும் வேளை மங்கலான நிழல்கள்,
சுற்றியுள்ள மரங்கள்,
ஆந்தையின் கூச்சல் சத்தம்,
காற்றின் மயக்கும் கிசுகிசுக்களுடன், நடுசாமத்தில் நிசப்தம் சூடிகொண்டது சூழலும் உலகமும் அவ்வாறே வெளியே கங்கு நாக்குகள் எரிந்து விறகு கட்டைகளை முழுங்கி கொண்டிருத்தது சட சட வென்று குளிருக்கு இதமாய் கூதற்காய கணபருக்கே காய்ந்து கிடந்தது சருகுகள் சல சலத்தது.
வணக்கம் 🌼🙏🏾
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )