...

12 views

என் வீ. மு.செ.த.வி பள்ளி
80/80

விடைபெறுகிறேன்
என்று சொல்ல மாட்டேன்
என் வீ.மு.செ.த.வி.யே......

ஏனெனில்

உன்னுடனான என் பந்தம்
என்றும் முடிவடையாதது.....🖤

விழாக்களை கொண்டாடியதில்லை நான்
ஆனால் உன்னோடு இருந்த ஒவ்வொரு நாளும்
எனக்கு விழா தான்
வீ.மு.செ.த.வி.யே!!!!
அன்றும் இன்றும்!!!!
அதுவும் விடுதலை விழா.....🔥

கணத்த இதயத்தோடும்
நனைந்த கண்களோடும்......
வந்தாலும்
நிறைய நினைவுகளை
ஆனந்தமாக அள்ளி வந்துள்ளேன்
ஆயுள் வரை அசைபோட....

உன்னோடு இருந்த காலம்
என் வாழ்வின் மழைக்காலம்....

தனிமை அனல் வீசிய
என் மனக்காட்டில்
அடர் மரங்கள் சூழ்
அணிநிழலாய்
உன்னோடு இருந்த காலம்

பாலையாய்த் திரிந்து போன
என் பருவங்கள் உன்னால்
குறிஞ்சியும் முல்லையும்
மருதம் நெய்தல் என
நாளொரு வண்ணமும்
பொழுதொரு மேனியுமாய்
மலர்ந்தது.....

எனக்காக நீ கொடுத்த
சொந்தங்கள் ஏராளம்....
அச்சொந்தங்களை எல்லாம்
மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டேன்
உனக்கு நன்றி!!!!
புதிதாய் பல சொந்தங்கள்
என் பாதையில்
அது எனக்கு மிகப் பேரானந்தம்....

வீ.மு.செ.த.வி.யே
உன்னோடு இருந்த காலங்கள்
மண்ணோடு சாயும் வரை
மறக்காது மனம்.....

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல் #mythoughts #தமிழ்க்கவிதைகள் #tamil