...

15 views

விடியற் காலை
விடியற் காலை
இழுத்துப் போர்த்தி
இன்னும் கொஞ்சம்
உறங்க இனிது

மரங்கள் இடையே
பறவைக் கூவல்
காதில் கேட்கும்
சப்தம் இனிது

கலைந்த கனவை
மனதில் ஓட்டி
திரும்பக் காணும்
கலவை இனிது

இல்லக் கிழத்தி
மாரில் சாய்ந்து
கொஞ்சிப் பேசும்
காதல் இனிது

செல்லச் சண்டை
போடா இனிது
பொய்யாய் கோபம்
போடியும் இனிது

இரண்டு மனங்கள்
ஒன்றாய் சேர்ந்து
இன்புற்று வாழ
இவ்வுலகமே இனிது.