...

4 views

காதல் நோயாளி
காற்றுக்கு போட்டியாளர் ஆனேன் நான்
கண்களை மூடி உலகம் மறந்து போனேன்
எனக்கு மட்டும்
சமூத்திரம் சங்குக்குள் மூள்கிப்போனது
காலை மாலையாக
மாலை காலையாக மாறிப்போனது
சிந்தைக்குள் புது சந்தம் பிறந்தது
சிறையும் சுதந்திரமானது
சுகங்கள் வலியானது
வலிகள் சுகமானது
அத்தனை அறிகுறியும் தென்பட்டது
நானும் இப்போது
காதல் நோயாளி தான்.

ஆரூர் பூ மோகன்