...

4 views

நட்பு
எங்கோ இருந்த இதயம் இங்கே ஒன்றாய் ஆனா கதை!
ஒரு நாள் யாரும் அறியா நொடியில் அருகில் அமர்ந்து பேசிய நொடிகள்,
இத்தனை நெருக்கம் தான் வருமோ என அறியா பொழுதில் அவளில் நானும் என்னில் அவளும் நட்பில் இருவரும் திளைத்த நொடிகள், இங்கே சண்டைகள் வருவதும் போவதும் என இருக்க ஏனோ ஒரு நொடி கூட தவற விட கூடா அவளின் பிணைப்பு என்னோடு வேண்டும், காலம் யாதையும் முடிவு செய்யும் ஆயினும் அவளின் நட்பு மட்டும் என் முடிவாய் வேண்டும் என் ஜனனம் இந்த மண் விட்டு செல்லும் பொழுதில் கூட அவள் கை அருகில் நான் கரைய வேண்டும். ஒரு முறையோ இரு முறையோ பல முறையோ சந்தித்த பலர் இருக்க இவள் மட்டும் எந்தன் பாத்தியா உயிர் ஆனால், நதி போல் செல்லும் இந்த நட்பின் ஆழ் கடல் அடைந்தும் அவள் அருகே நான் இருக்க வேண்டும்.
© அருள்மொழி வேந்தன்