...

12 views

வா என்றான்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
என்ற கேள்வியை
நீ
எழுப்பும் போதெல்லாம்
உன்னை நினைத்து கொண்டிருப்பதை
மறைத்து
ஏதோ ஒரு வேலை செய்வதாய்
பொய் சொல்கிறேன்...

தேவை‌ என்பதற்காக
நுரையீரல்
காற்றை
சேமிப்பதில்லை
தேவையில்லை
என்றாலும்
மனம்
காதலை
மறப்பதில்லை...

வா
என்றே நீ
வாய் மொழியில்
சொன்னால்
வந்து விடுகிறேன்
அதே வார்த்தையை
நீ விழி மொழி
மொழிந்தால்
தயக்கத்தை
சூடிக்கொள்கிறது
பெண்மை...


© Meera