...

2 views

அவள்


கொஞ்சம் தாமதமானாலும் கூட
ஓடி ஓடி வந்து உங்கள்
முன்னால் அமர்பவள் ஓர் நாள்
நிரந்தரமாக வராமலே மௌனித்துப்போகலாம்...

கண்ணீரோ ,புன்னகையோ நினைவுகளோ
எதாக இருந்தாலும்
மறைத்து விடாது கொட்டிவிட்டு
அமைதியாக விலகிச்செல்பவள்
ஓர் ஜீரணிக்க முடியாத வலியினை
சொல்ல முடியாது தவித்து
அந்த வலிகளாலேயே காலப்போக்கில்
ஜீரணிக்கப்பட்டு யாரும்
எதிர்பார்க்காத ஒரு
தருணத்தில் மொத்தமாக மறைந்தே போகலாம்....

அவள் சிரிக்கிறாள் அழுகிறாள் கோபப்படுகிறாள்....நேசிக்கிறாள்தான்...
ஆனால் உண்மையான
நிம்மதியினை உணர்கிறாளா என்று
யாருக்குமே தெரியாது....
மொத்தத்தில் அவள் வாழ்கிறாளென்பதே
ஆகப்பெரிய நாடகமென்று அவளன்றி
யாருக்குத்தெரியும்.....

#இசைவிழிசந்திரன்.