...

6 views

தீரா இரவுகள்
நிழல் போல் நீயும் நிஜம் தேடியே நானும்,
இரவின் மொழி அறிந்து,
யாதென்ன புரியா மாயை தேடியே பயணம் எங்கோ தொடங்கி எங்கே செல்கிறது என தெரியா நிமிடங்கள் ,
நிலவின் ஒளி சூழ நதிக்கரை மனர்மேடும்,
சாளரம் வழியே காத்திருக்கும் காதலின் கவி வரிகள் ஒவ்வன்றாய் நிலவினை இழுத்து செல்ல,
கதைகள் பேசிய நொடிகள் நானும் நீயும், தேநீர் கோப்பையும்.
விடியல் ஒளியின் முழிப்பில் முழுதுமாய் உறக்கம் தழுவி கொள்ள.
தீரா இரவின் தீரா காதலில் தெரியா பாதையில் தெளியா போதையாய் நீயும் நானும் காதலின் கடலில்,
முற்றிலுமாய் மூழ்கிடும் தருணம் தான் என்னவோ.
இரவுகளும் தீராதே.
© அருள்மொழி வேந்தன்