...

2 views

காற்றுக்கென்ன வேலி
வி.எம்.எம் பெண்கள் மேல் நிலைப் பள்ளி..... திருச்சி நகரத்தில் முக்கியமான பகுதியில் நடைபெற்று வரும் பிரசித்திப் பெற்ற பள்ளி..... அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தால் பெருகி விட்ட தனியார் பள்ளிகளுக்கு மத்தியில்..... நடுத்தர வர்கத்தை சேர்ந்த மாணவிகளின் அறிவுத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது இப்பள்ளி.... சாயங்கால நேரம் கடைசி பாடவேளையில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன.... மாணவிகளின் முகத்தில் ஒரு உற்சாகம் மின்னிக் கொண்டிருந்தது... கடைசி பாடவேளையல்லவா.... வீட்டிற்கு செல்லும் நேரம் என்றால்..... வேலை செய்பவர்களிலிருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் வரை அனைவரையும் பாகுபாடின்றி உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.... இன்றும் மாணவிகள் உற்சாகமாக பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தனர்....

மிதுளா, பத்தாம் வகுப்பு கணித ஆசிரியை. பெரும்பாலான மாணவிகளால் தாயாக மதிக்கப்படும் இளம் ஆசிரியை. இன்னும் திருமணம் ஆகவில்லை. அந்த பள்ளியிலேயே தைரியத்துக்கு பெயர் போன ஜான்ஸி ராணி இவர் தான். அங்கு படிக்கும் மாணவிகளுக்கு முன் உதாரணமாக இருந்து வருபவர். கடைசி பாடவேளையில் அவருக்கு வகுப்புகள் இல்லாததால். ஆசிரியைகளுக்கான ஓய்வு அறையில் இருந்தார் மிதுளா. பள்ளி நிறைவடையும் முன் கழிவறைக்கு சென்று வந்து விடலாம் என்று எண்ணியவர் கழிவறையை நோக்கி சென்றார். கழிவறையினுள் நுழைந்த மிதுளா, சிறிது நேரத்தில் வெளியே வந்தார்  .தனது கை கடிகாரத்தில் நேரம் பார்த்தவர், பள்ளி நிறைவடைய இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதை அறிந்தவராய் மெதுவாகவே தனது அறையை நடக்க துவங்கினார். பெரிய பள்ளி என்பதால் அங்கு நிறைய கழிவறைகள் கட்டப்பட்டிருந்தன. மிதுளா அந்த இடத்தை விட்டு வெளியேறும் நேரம் யாரோ ஒருவரின் தேம்பல் சத்தம் கேட்கவே, மெதுவாக தனது நடையை நிறுத்தினார். அவரது செவிகள் கூர்மையாய் சத்தம் வந்த திசையை ஆராய்த்தொடங்கியது. சத்தம் வந்த திசையை கண்டறிந்தவர், சத்தம் வராமல் மெதுவாக தனது காலடிகளை எடுத்து வைத்து அந்த சத்தம் வந்த இடத்தை நோக்கி நகர்ந்தார். அவருக்கு தெரிந்தது அது நிச்சயம் ஒரு மாணவியின் சத்தம் தான். அவரது மனதினுள் பல கேள்விகள் எழுந்தது. ஏன் அந்த பெண் அழ வேண்டும் ? உடல் உபாதைகள் காரணமாக அழுகிறாளா? என்று பல கேள்விகள் அவரது மனதினுள் எழ, அதை எல்லாம் புறம் தள்ளி அந்த மாணவி இருந்த அறையை நோக்கி நடந்தவருக்கு, அந்த சிறுபெண் அழுகையுனூடே பேசுவது எல்லாம் தெளிவாக செவியில் விழுந்தது.

ஏன் இப்படி பண்ணுற, என்னால நீ சொல்லுற மாதிரில்லாம் செய்ய முடியாது.

.....

எனக்கு ஸ்பெஷல் க்ளாஸ் இருக்கு. என்ன விட்டுடு ப்ளீஸ். உன்ன கெஞ்சி கேட்குறேன்.

....

வேணாம் வேணாம், அப்படி மட்டும் பண்ணிடாத என் லைஃபே போய்ட்டும்.

....

அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை. ஆனால் அந்த பக்கம் கூறப்பட்ட வார்த்தைகளால், அந்த மாணவியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. விம்மி விம்மி அழுதவள் சத்தம்...