...

7 views

அமானுஷ்யம்
* பெங்களூரை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் (நித்யா) சென்னையில் பெசன்ட் நகர் பகுதியில் தன் சொந்த வீட்டில் தன் தோழிகள் (ஆனந்தி) (பூஜா) இருவருடன் வசித்து வந்தாள்.

* ஒரு நாள் பூஜாவும் ஆனந்தியும் தன் சொந்த ஊருக்கு செல்ல நித்யா தன் வீட்டில் தனியே வசித்து வந்தாள்.

* ஆனந்தியின் சொந்த ஊர் பொள்ளாச்சி அங்குள்ள தனது வீட்டில் தன் குடும்பத்துடன் ஆனந்தி வசித்து வந்தாள் அவள் குடியிருக்கும் பகுதியில் சில பெரிய வீடுகள் மட்டுமே இருந்தது மற்றவை எல்லாம் ஓரளவிற்கு வசதி கொண்ட கான்கீரீட் வீடுகள் தான்.

* ஆனந்தி வீட்டின் மாடியில் ஓர் அறை உள்ளது அங்கு தான் அவள் சுதந்திரமாக இருப்பாள் இரவு நேரம் வந்தது மணி சரியாக 12.00 அவள் வசிக்கும் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

* சில நாய்கள் மட்டும் அங்கும் இங்கும் பார்த்து ஊளையிட்டு கொண்டிருந்தது சில மணி துளியில் அந்த சத்தமும் அடங்கி போனது.

* ஆனந்திக்கு எதுவும் கேட்கவில்லை அவள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தாள் சட்டென்று மின்சாரம் துண்டிக்கபடுகிறது ஆனந்தி காற்றில்லாமல் கண் விழிக்க மின் விலக்கு விசிறி ஆகியவை செயல் படுத்தி பார்க்கிறாள் ஆனால் இணைப்பு வரவில்லை.

* ஆனந்தி வெளியே வந்து பார்க்கிறாள் மின்சாரம் எங்குமில்லை என்பதை அவள் அறிகிறாள் ஆனந்தி பின் மீண்டும் உறங்க சென்றாள் மின்சாரம் வந்தது.

* திடீரென பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு ஆனந்தி எழுந்தாள் கீழே வேகமாக வந்தவள் சமையலறைக்குள் மிக மெதுவாக சென்றாள்.

* உள்ளே சென்று பார்த்தாள் ஒரு பூனைக்குட்டி பாத்திரத்தின் அருகில் அமர்ந்துள்ளது அதை பார்த்த அவள் மனதில் ஒரு எண்ணம் ச்ச பூனைக்குட்டி தானா என்று.

* பின் ஆனந்தி மீண்டும் மாடிக்கு வருகிறாள் அவள் பின்னால் யாரோ வருவது போல் தோன்றியது அவள் திரும்பி பார்க்க அங்கு யாரும் இல்லை.

* சட்டென அவள் கண் முன் தோன்றி மறைந்த உருவத்தை கண்டு அவள் மிரண்டு போனாள் தன் அறையில் வந்து தாழ்பாலை போட்டு கொண்டு தண்ணீர் அருந்த தொடங்கினாள்.

* அப்போது காற்று சற்று வேகமாக வீச தொடங்கியது சட்டென ஆனந்தி அதிர்ந்து போனாள் திடீரென அவள் அறையில் புத்தகங்கள் பொருட்கள் ஆகியவை தானாக கீழே விழுகிறது.

* ஆனந்தி பயத்துடன் கண்ணாடியை பார்க்க அதில் நான் உன்னை கொல்ல போகிறேன் என்று எழுத்து எழுத தொடங்கியது.

* உடனடியாக அவள் வெளியே ஓட நினைக்கிறாள் அவள் கைகளை பிடித்து ஏதோ ஒன்று படுகையில் தள்ளியது.

* ஆனந்தியால் ஏதும் செய்ய முடியாமல் போனது அங்கு மேஜை மேல் இருந்த ஓர் கத்தி தானாக வந்து ஆனந்தி யை சரமாரியாக குத்த தொடங்கியது.

* ஆனந்தி ரத்த வெள்ளத்தில் தன் கண்களை மூடுகிறாள்.
------------------------------------------------