...

4 views

நகர வாழ்க்கை
பெரு நகர வாழ்க்கையில் எல்லா தரப்பு மக்களுக்கும் வாழ்க்கை உண்டு . அவரவர் கல்வி தகுதியை கொண்டே நகர வாழ்க்கை அதன் நிறத்தை காண்பிக்கும் .

இருப்பவரின் வாழ்க்கை முறையென்றும் , இல்லாதவன் வாழ்க்கை என்றும் பிரிந்து கிடக்கும் பெரு நகர வாழ்க்கையில் . 

இதில் ஒருவன் தன் நிலையில் நின்று பொருந்திக் கொள்வது என்பது சற்றே கடினம் தான் .

அத்தனை மாயா ஜாலங்களை கொண்டது  நகர வாழ்க்கை ,

எவரிடம் நம்பிக்கை கொள்வது என்றே ஒதுங்கி போகும் மக்கள் கூட்டம் .

வெள்ளந்தி பேச்சிற்காய் ஏங்கும் ஒரு சாரார் மக்கள் .

அடுக்கு மாடி குடியிருப்புகளில்
அதற்கென கட்டுப்பாடுகள் .

குழந்தைகளின் எதிர் காலம் குறித்து கல்வியில் பெற்றோர் எடுத்து கொள்ளும் அக்கறை .

ஆரம்ப பள்ளி சேர்க்கவே லட்சங்கள் செலவு  .
இப்படி உழைபதெல்லாம் நகரத்திலேயே  செலவிட்டு .

கடைசி காலங்களில் தேடுகிறது கிராம
வாழ்க்கை .

பெரு நகர வாழ்க்கையின் பெருமைகளை பேசிய படி .

© piyu