...

33 views

விதவை

© நாவல்

[#விதவை part 1

ஊரே வியக்க தன்னுடைய மகள் லட்சுமிக்கு மிகப்பெரிய இடத்தில் சம்பந்தம் பேசி கல்யாணம் நடத்தி முடித்தார் லட்சுமியின் அப்பா குணசேகரன்.

லட்சுமிக்கு கூட பிறந்த ஒரு அண்ணன் இருக்கிறான், அவன் பெயர் ராஜ்.

அவன் வேலை பார்க்கும் இடத்தில் ஒரு பெண்ணை காதல் செய்துகொண்டு இருக்கிறான், தன்னுடைய தங்கச்சி கல்யாணம் முதலில் முடியட்டும் அதுக்கு அப்புறம் நம்ம விஷயத்தை வீட்டில் சொல்வோம் என்று ராஜ் அவனுடைய காதலி வினிதாவிடம் கூறினான்.

அதற்கு வினிதாவும் சரி என்று கூறியிருந்தாள்.
ஆனால் இப்போது வினிதா வீட்டில் அவளுக்கு வேறொரு இடத்தில் வரன் பார்க்க தொடங்கினார்கள்.
இதை ராஜ்யிடம் கூறி தன்னுடைய வீட்டில் வந்து பேசி உடனே கல்யாணம் செய்துகொள்ள சொல்லி வினிதா அவளுடைய சூழ்நிலையை சொல்லி தினம் தினம் ராஜ்யிடம் அழ தொடங்கினாள்.

இதையெல்லாம் லட்சுமி பார்த்துக்கொண்டு தான் இருந்தாள்.
தன்னுடைய கல்யாணம் நடந்தால் தான் அண்ணன் காதலை பற்றி வீட்டில் பேச முடியும் என்று லட்சுமி புரிந்து கொண்டாள்.

லட்சுமி அப்போதுதான் முதல் வருட கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தாள்.
தன்னுடைய அண்ணன் ராஜ்யிடம் நான் கல்யாணம் செய்து கொள்கிறேன்.
உன்னுடைய காதலை பற்றிய வீட்டில் பேசு அண்ணா என்று லட்சுமி கூறினாள்.

இப்போவே கல்யாணம் பன்னிக்கிட்டா உன் படிப்பு என்ன ஆவது என்று ராஜ் கேட்டான்.

நம்ம வீட்டில் இருந்து படிக்கும் படிப்பை கல்யாணத்திற்கு பிறகு என்னுடைய புருஷன் வீட்டில் இருந்து படித்துக்கொள்கிறேன் என்று சிரித்த படி பதில் கூறினாள் லட்சுமி.

ஆனால் லட்சுமிக்கு இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை அண்ணனின் சூழ்நிலையை புரிந்துகொண்டு தான் கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்தாள் லட்சுமி.

லட்சுமி கூறியது போல் கல்யாணத்திற்கு பிறகு படிக்க அனுப்புவதாக ஒரு மாப்பிள்ளை வீட்டார்கள் லட்சுமியின் அப்பா குணசேகரிடம் கூறினார்கள்.
அவர்கள் நல்ல குடும்பம் வசதி வாய்ப்புகளுடன் இருக்கவும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டார் குணசேகர்.
அதன் பிறகு தான் ஊரே வியக்கும் அளவிற்கு லட்சுமியின் கல்யாணம் நடந்துக்கொண்டு இருக்கிறது.

தன்னுடைய கல்யாணத்தில் வைத்தே தன்னுடைய அண்ணன் ஒரு பெண்ணை காதலிப்பதாக அப்பாவிடம் கூறினாள் லட்சுமி.
லட்சுமி கூறியதை கேட்டதும் ராஜ்யை கூப்பிட்டு தங்கச்சி சொல்வது அனைத்தும் உண்மையா என்று கேட்டார் குணசேகரன்.

சரி தங்கச்சி கல்யாணம் நடந்து முடியட்டும் அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு வீட்டில் நாம் பேசுவோம் என்று சம்மதம் கூறினார் குணசேகரன்.

தன்னுடைய காதலை அப்பா ஒத்துக்கொண்டார் என்று ராஜ்க்கு ஒரே குஷியாக இருந்தது.

ராஜ்,லட்சுமி இருவருடைய அம்மாவும் இறந்து விட்டதாள் சிறு வயதில் இருந்தே ராஜ்,லட்சுமி இருவரையும் அப்பாவான குணசேகரன் தான் வளர்த்து வருகிறார்.

தன்னுடைய அண்ணன் வாழ்க்கைக்காக 18 வயதிலேயே கல்யாண வாழ்க்கையை தொடங்க போகிறாள் லட்சுமி.

ஆனால் இந்த கல்யாண வாழ்க்கையில் இப்போது இருக்கும் சிரிப்பு வரும் நாட்களில் இடியாக இதயத்தில் இறங்க போவது அப்போது லட்சுமிக்கு தெரியாது.

அப்பாவி பெண்ணாக கல்யாணம் முடிந்து புருஷன் வீட்டிற்கு செல்ல போகும் லட்சுமி கூடிய சீக்கிரம் நாடே பேசும் ஒரு பெண்ணாக மாறப்போவது அப்போது அவளுக்கு தெரியாது.

[#விதவை part 2

திருமணம் முடிந்து இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு,
பழகிய தோழிகளை விட்டு.
தன்னுடைய சாப்பிடும் பழக்கத்தை மாற்றி,
இரவில் தூங்கிய நேரத்தை மாற்றி,
விடிந்ததும் தூக்கம் களைந்த பின் எழும் பழக்கத்தை மாற்றி,
தனக்கு தன்னுடைய சொந்தங்களை பிரிந்த வருத்தம் மனதில் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் குடும்பத்திற்காகவும், இனிமேல் வாழ போகும் புகந்த வீட்டிற்காகவும் வராத புன்னகையை வலுக்கட்டாயமாக வரவழைத்து கொண்டு குடும்ப கௌரவம் என்று ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டு தன்னையே மாற்றிக்கொண்டு ஒரு புது பிறப்பாக தன் கணவன் வீட்டிற்குள் முதல் அடியை எடுத்து வைத்தாள் லட்சுமி.

(நான் கூறிய அனைத்தும் இன்று வரை ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் மாற்ற முடியாத நிகழ்வு தான் நண்பர்களே)

லட்சுமியின் கணவன் பெயர் கரண்.

லட்சுமியின் கல்யாண வாழ்க்கை முதல் 8 மாதங்கள் வரை நன்றாக இருந்தது, அவளும் தன்னுடைய 2ம் வருட கல்லூரி படிப்பையும் படித்துக்கொண்டு இருந்தாள்,
அதன் பிறகு தான் பிரச்சினைகள் ஆரம்பித்தது.

வீட்டிற்கு வரும் சொந்காரர்கள் வீட்டில் ஏதும் விஷேசம் உண்டா என்று லட்சுமியின் மாமியாரிடம் கேட்க தொடங்கினார்கள்.
அவர்கள் அப்படி கேட்டுக்கொண்டே இருப்பது லட்சுமியின் மாமியாருக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

லட்சுமி ஏன் இன்னும் கர்ப்பம் தரிக்காமல் இருக்கிறாள் முதலில் அவளை டாக்டரிடம் சோதனைக்கு அழைத்து போய்ட்டு வா என்று லட்சுமியின் மாமியார் தன்னுடைய மகனான கரணிடம் கூறினாள்.

அப்போதுதான் கரண் தயங்கியவாறு தன் அம்மாவிடம் ஒரு விஷயத்தை கூறினான்.

லட்சுமியின் கல்லூரி படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம் என்று தான் இருவரும் முடிவு செய்திருக்கிறோம் என்று கரண் தன்னுடைய அம்மாவிடம் கூறினான்.

இதை கேட்டதும் கரணின் அம்மா பத்திரகாளியாக மாறிவிட்டாள் நம்முடைய சொந்தகாரங்க,பக்கத்தில் உள்ளவங்க எல்லோரும் வீட்டில் ஏதும் விஷேசம் இல்லையா என்று ரொம்பவும் நக்கலாக என்னிடம் கேட்கிறார்கள், எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு என்னுடைய குடும்பத்திற்கும் ஒரு வாரிசு உண்டாகிருச்சுனு நான் பெருமையா சொல்லனும் உன் பொண்டாட்டி படிச்சு கிழிச்சது எல்லாம் போதும் ஆக வேண்டிய வேலையை பாரு என்று கரணின் அம்மா கத்திவிட்டு சென்றாள்.

அம்மாவை எப்படி சமாளிப்பது இந்த சூழ்நிலையை எப்படி தன் மனைவி லட்சுமியிடம் சொல்லுவது என்று பாவம் கரண் செய்வது அறியாமல் விழி பிதிங்கி நின்றான்.

மாலை கல்லூரி முடிந்து வந்ததும் லட்சுமியிடம் சூழ்நிலையை சொல்லி குழந்தையை பெற்றுக்கொண்டே உன்னுடைய படிப்பை தொடரலாம் குழந்தையை அம்மா பார்த்துக்கொள்வார்கள் என்று கரண் கூறினான்.

2ம் வருட படிப்பு முடிந்தவுடன் நாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
குழந்தை பிறந்தவுடன் கடைசி வருட படிப்பை நான் முடித்துக்கொள்கிறேன் நீங்களும்,அத்தையும் மனவருத்தத்தில் இருப்பது குடும்பத்திற்கு நல்லதில்லை என்று ஒரு நல்ல மனைவியாக தன்னுடைய கணவனுக்கு ஆறுதல் கூறினாள் லட்சுமி.

2ம் வருட கல்லூரி படிப்பு முடிந்தது.
4 மாதங்களில் லட்சுமி கர்ப்பம் தரித்தால் கரணின் அம்மா லட்சுமியை தலையில் வைத்து தாங்கினார்கள்.

ஆனால் அவர்கள் தான் இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறந்தவுடன் காலில் போட்டு மிதிக்க போகிறார்கள் என்று பாவம் அப்பாவியான லட்சுமிக்கும் தெரியாது, ஒரு பாவமும் அறியாமல் வயிற்றில் இருக்கும் அந்த பிஞ்சு கருவுக்கும் தெரியாது.

(குழந்தை பிறந்தவுடன் கல்லூரிக்கு செல்லலாம் என்று கனவோடு இருக்கும் லட்சுமியின் வாழ்க்கை முற்றிலும் மாறப்போகிறது)

[#விதவை part 3

மாதங்கள் சென்றது,
ஒரு அழகான பெண் குழந்தையும் லட்சுமிக்கு பிறந்தது.

குழந்தை பிறந்தவுடன் கரணின் அம்மாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை ஏனென்றால் அவர்கள் வாரிசாக எதிர்ப்பார்த்தது ஆண் குழந்தையை.

குழந்தை பிறந்து 40 நாட்கள் சென்றதும் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி கரணின் வீட்டில் சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது.
அதே சமயம் தான் கல்லூரியில் கடைசி வருட படிப்புக்கு விண்ணப்பம் தருவதாக லட்சுமிக்கு கல்லூரி வளாகத்தில் இருந்து மெசேஜ் அனுப்பினார்கள்.

நான் முதலில் போய் உனக்கு விண்ணப்பம் வாங்கிட்டு வரேன் என்று லட்சுமியிடம் சொல்லி விட்டு கரண் சென்றான்.

குழந்தைக்கு திவ்யா என்று பெயர் வைத்து அனைவரும் சக்கரை தண்ணீரை குழந்தைக்கு குடுத்தனர்.
அப்போதுதான் லட்சுமியின் வாழ்க்கையை திசை தெரியாமல் மாற்றி போட போகும் அந்த போன் வந்தது.

லட்சுமிக்கு வந்த போன்னை எடுத்து யார் என்று கேட்டாள்.

அண்ணாசாலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுறோம் இந்த நம்பர் பயன் படுத்துகிற நபர் உங்களுக்கு என்ன உறவு என்று கேட்டனர்.

நீங்கள் பேசும் நம்பரின் சொந்தகாரரின் பெயர் கரண் நான் அவரின் மனைவி என்ன விஷயம் என்னிடம் சொல்லுங்கள் என்று லட்சுமி கூறினாள்.

உங்க கணவர் பைக் விபத்தில் சம்பவ இடத்திலே இறந்து விட்டார் அரசு மருத்துவமனைக்கு வந்து அது உங்கள் கணவர் தானா என்று உறுதி செய்து அவரின் உடலை வாங்கி கொள்ளுங்கள் என்று லட்சுமியிடம் தகவலை சொல்லி விட்டு போன்னை வைத்தார் இன்ஸ்பெக்டர்.

இதை கேட்டதும் போன்னை அப்படியே கீழே போட்டுவிட்டு கதறி அழுதாள் லட்சுமி.
அனைவரிடமும் விஷயத்தை கூறினாள்.

குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி நடந்த வீட்டில் இப்போது அழுகையும் கண்ணீருமாக இழவு வீடானது.

கரணின் உடலுக்கு செய்ய வேண்டிய அனைத்து சடங்குகளும் முடிந்த பின்னர் 21 வயதில் 40 நாள் குழந்தையை கையில் வைத்திருக்கும் லட்சுமிக்கு தாலி அறுத்து நெற்றியில் உள்ள குங்குமத்தினை அழித்து கையில் போட்டிருந்த வளையங்களை உடைத்து எந்த ஊர் பார்க்க கல்யாணம் நடந்து சுமங்கலியானாலோ அதே ஊர் பார்க்க அவளை இப்போது அமங்கலியாக்கினார்கள் அதாவது இனிமேல் 21வயதே ஆன லட்சுமிக்கு இந்த சமுதாயம் தர போகும் பட்டம் விதவை.

கரணின் இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து தன்னுடைய வீட்டில் இருந்து குழந்தையை தூக்கிக்கொண்டு 4 மாதங்கள் கழித்து புகுந்த வீட்டிற்கு சென்றாள் லட்சுமி.

லட்சுமியை பார்த்ததும் அவளின் மாமியார் கதறி அழுதாள், நீ எப்போதும் எங்க வீட்டு பொண்ணு தான் மா ஆனால் இந்த குழந்தையை மட்டும் இந்த வீட்டிற்குள் கொண்டு வராதே இது பிறந்து தான் என் மகனை கொன்றுச்சு என்று கத்தினாள் லட்சுமியின் மாமியார்.

இந்த வார்த்தையை கேட்டதும் பயங்கரமான கோபம் வந்தாலும் அதையெல்லாம் விட கண்ணீர் முதலில் வந்தது லட்சுமிக்கு,
இந்த பிஞ்சு மழழை மேல் எதுக்கு இவ்வளவு பெரிய பழியை போடுறிங்க உங்கள் மகன் இறந்ததற்கு அவர் பெற்ற பிள்ளையே எப்படி காரணம் ஆகும் என் பிள்ளையை பழி சுமத்தும் இந்த குடும்பத்தில் இனிமேல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து தன்னுடைய பிறந்த வீட்டிற்கே சென்றாள் லட்சுமி.

அவளுடைய பிறந்த வீட்டிலும் அவளை இனிமேல் எப்படி பார்ப்பார்கள் என்று அவளுக்கே தெரியாமல் தன்னுடைய அப்பா,அண்ணனின் ஆதரவை தேடி தன் குழந்தைக்காக சென்றாள் லட்சுமி.

(ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறும் சமுதாயத்திற்கு இனி செருப்படி தருவது போல் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து காட்டப்போகிறாள் லட்சுமி)

[#விதவை part 4

தன்னுடைய பிறந்த வீட்டில் கைக்குழத்தையுடன் தங்கியிருந்தாள் லட்சுமி.

லட்சுமியின் அண்ணி அவளுக்கு வேண்டிய வசதிகளை எல்லாம் செய்து குடுத்தாள்.

இப்படியே வீட்டில் உள்ளயே இருந்தால் உன்னால எதையும் மறக்க முடியாது மா உன்னுடைய கல்லூரி படிப்பை நீ முடிக்க உனக்கு ஒரு வாய்ப்பு தருவதாக கல்லூரி முதல்வர் என்கிட்ட சொன்னாரு மா,
நான் அண்ணி எல்லாம் இருக்கோம் உன் பிள்ளையை நாங்க பார்த்துகிறோம் நீ உன்னுடைய கடைசி வருட படிப்பை முடிச்சுட்டு உன் கையில் ஒரு டிகிரி மட்டும் வாங்கிக்கோ மா உனக்காக இல்லை என்றாலும் உன் பிள்ளை எதிர்காலத்திற்கு பயன்படும் என்று லட்சுமியின் அப்பா ஆறுதல் கூறினார்.

நம்மலும் அதிக நாட்கள் இங்கிருந்து அண்ணாவுக்கும்,அண்ணிக்கும் தொந்தரவு குடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து கல்லூரியில் படிக்க அப்பாவிடம் சம்மதம் சொன்னாள் லட்சுமி.

காலையில் கல்லூரிக்கு சென்றவுடம், குழந்தையை அண்ணியும், அப்பாவும் பார்த்துக்கொள்வார்கள் இப்படியே ஒரு 5 மாதங்கள் ஓடின அப்போதுதான் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு வாத்தியார் லட்சுமியை தப்பான கண்டோட்த்தில் பார்க்க ஆரம்பித்தான்.

முதல் ஒரு தேர்வு முடிந்தது அதில் லட்சுமி கொஞ்சம் கம்மியாகவே மதிப்பெண் எடுத்திருந்தாள்.
அந்த மதிப்பெண் பத்தாது படிப்பில் கவனம் செலுத்தாமல் வேறு எதில் கவனம் செலுத்திகிறாய் என்று அனைத்து மாணவர்கள் முன்பும் அந்த கேடு கெட்ட வாத்தியார் திட்டினான்.

அதன் பின்னர் கல்லூரி முடிந்ததும் மாலை என்னை பார்த்துவிட்டு போ என்று பரீட்சை பேப்பரை லட்சுமியின் மூஞ்சில் எறிந்தான் அந்த வாத்தியார்.

லட்சுமியும் மாலை கல்லூரி முடிந்ததும் அந்த வாத்தியாரை பார்க்க அவனுடைய அறைக்கு பயந்து கொண்டு தயங்கியவாறு சென்றாள்.

லட்சுமி உள்ளே வந்ததும் கதவை பூட்டினான் அந்த கேடு கெட்ட நாய்.

கதவை எல்லாம் சாத்தாதிங்க சார் பயமா இருக்கு என்று அழுதவாறு கெஞ்சினாள் லட்சுமி.
உனக்கு கல்யாணமாகி புருஷன இழந்துட்டு நிக்கிற, கை குழந்தையை வச்சுகிட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மார்க் வேற கம்மியா எடுக்கிற இப்படியே கவன சிதறலோடு இருந்தால் உன்னால் கண்டிப்பா டிகிரி முடிக்க முடியாது அதனால அப்பப்போ என்ன கவனிச்சுகிட்டா உனக்கும் புருஷன் இல்லாத குறை சரியாகும், எனக்கும் எந்தவொரு டென்ஷனும் இல்லாமல் இருக்கும் என்ன சொல்லுற
ஒரு வேல விருப்பம் இல்லனு சொன்னா என்ன மீறி உன்னால கண்டிப்பாக டிகிரி வாங்கவே முடியாது, என்று அந்த கேடு கெட்ட நாய் சொல்லி முடித்தான்.

லட்சுமி எதுவும் சொல்லாமல் அமைதியாக தலை குனிந்து நிற்க சம்மதம் தெரிவித்துவிட்டாள் என்று புரிந்து கொண்டான் அந்த வாத்தியார்.

இதுதான் புத்திசாலிக்கு அழகு என்று சொல்லி விட்டு லட்சுமியின் மேல் போட்டிருந்த துப்பட்டாவை எடுத்தான் அந்த வாத்தியார்.

அடுத்த நொடியே முகம் எல்லாம் வியர்வை வடிய பயந்து போய் 10 அடி பின்னால் போனான் அந்த வாத்தியார்.
அதற்கு காரணம் லட்சுமியின் துப்பாட்டா உள்ளே சுடிதாரில் செய்தி சேனல்களுக்கு நேரடியாக ஒளிப்பரப்ப படும் கேமராவை பொறுத்திருந்தாள் லட்சுமி.
அங்கே நடந்த அனைத்தையும் நேரடி ஒளிப்பரப்பாக ஊரே பார்க்கும் படி செய்துவிட்டாள் லட்சுமி.
என்னோட வாழ்க்கையவே அழிச்சுட்டயே டி என்று சொல்லி கொண்டே அறையில் சோதனைக்காக வைத்திருந்த ஆசீட் எடுத்து ஊற்ற முன்னால் வந்தான் அந்த வாத்தியார்.
சூழ்நிலையை புரிந்து கொண்ட லட்சுமி அடுத்த நிமிடமே கீழே கிடந்த துப்பட்டாவை எடுத்து அருகில் இருந்த கெமிக்கல் பாட்டில்களை துப்பட்டாவில் சுற்றி ஆசிட் வீசுவதற்கு முன்பு லட்சுமி துப்பட்டாவில் உள்ள பாட்டில்களை கொண்டு அடித்துவிட்டாள்.

[#விதவை part 5

லட்சுமி அடித்ததில் அந்த வாத்தியார் அங்கேயே மயங்கி விழுந்தான்.

அதன் பிறகு அந்த அறையை திறந்து கொண்டு வெளியே வந்தாள் லட்சுமி அனைத்து மக்களும் மீடியா சேனல்களும் அங்கே வந்து லட்சுமியை சூழ்ந்துக்கொண்டனர்.

அந்த வாத்தியார் தப்பாக தான் உங்களிடம் நடந்து கொள்ள போகிறார் என்பது எப்படி உங்களுக்கு முன்பே தெரியும் என்று மீடியாகள் அனைவரும் லட்சுமியிடம் கேள்விகளை கேட்டனர்.

எந்தவொரு இடத்திலும் பெண்கள் இருக்கும் இடத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும் பல ஆண்கள் அங்கே உள்ள பெண்களை வேலை முடிந்ததும் என்னை வந்து பார்த்துட்டு போ என்று சொன்னாலே அவன் ஒரு பொறுக்கி நாய் தான் அந்த மாதிரி ஒரு நாய் தான் இப்போ என்கிட்ட அடி வாங்கிட்டு உள்ளே கிடக்கு என்று பதில் கூறினாள் லட்சுமி.

எல்லாம் முன்பே தெரிந்த உங்களுக்கு அந்த வாத்தியார் உங்கள் மீது ஆசீட் வீச வரும் போது கூட ஏன் எங்கள் யாரையும் நீங்கள் உள்ளே வர கூடாது என்று கூறினிர்கள் என்று கேள்வி கேட்டனர் மீடியாக்கள்.

இன்னைக்கு என்கிட்ட இந்த நாய் தப்பா நடக்க முயற்சி செய்தான் அது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததால் உதவிக்கு வருகிறேன் என்று சொல்லுறிங்க.
இந்த மாதிரி பொறுக்கி நாய்கள் ஊர் முழுவதும் இருக்கும்போது எல்லா இடத்திலும் ஒரு பெண் இன்னொருவர் உதவியை எதிர் பார்த்து நிற்க கூடாது.

நம்மை காப்பாற்ற யாராவது வருவார்கள் என்று காத்திருப்பதால் தான் பல பெண்களின் தைரியம் அவர்களுக்கே தெரியாமல் இருக்கிறது.
ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க நினைக்கும் ஒரு நாயை தற்காப்புக்காக அந்த பெண்ணே கொலை செய்யலாம் என்று இந்திய சட்டம் IPC100ல் இருக்கிறது இது நம் நாட்டில் எத்தனை பெண்களுக்கு தெரியும் என்று லட்சுமி பேசி முடித்து விட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினாள்.

அந்த வாத்தியார் நாயை போலீஸில் ஒப்படைத்தார்கள் பொது மக்கள்.

லட்சுமி வீட்டிற்கு வந்ததும் நடந்த அனைத்தையும் விசாரித்தார் அவளுடைய அப்பா.
நீ செய்த விஷயம் எங்களுக்கு ரொம்பவே பெருமையா இருக்கு என்று கூறினார்கள் லட்சுமியின் அப்பா, அண்ணன் .அண்ணி அனைவரும்.
அதன் பிறகு கல்லூரியில் படிப்பை முடித்து டிகிரி வாங்கினாள் லட்சுமி.

அதே சமயம் லட்சுமியின் அண்ணி கர்ப்பமாக இருந்தாள் அவளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வீட்டில் நடந்தது.

அனைவரும் லட்சுமியின் அண்ணிக்கு சந்தனம் பூசி வளையல்கள் போட்டுவிட்டனர்.
ஆனால் லட்சுமி மட்டும் அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் நின்று வேதனையுடன் அண்ணிக்கு நம்மால் வளையல் போட முடியவில்லையே என்று கண் கலங்கிய படி பார்த்துக்கொண்டிருந்தாள்.

(கணவனை இழந்த பெண்கள் எதற்காக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என்கிற முட்டாள் தனமான மூட நம்பிக்கையை அண்ணியின் வளைகாப்பில் தான் லட்சுமி உடைக்க போகிறாள். எப்படி என்று அடுத்த பகுதியில் பார்ப்போம் நண்பர்களே)

[#விதவை part 6

அனைவரும் தன்னுடைய மனைவிக்கு வளையல் போட்டுவிடும் பொழுது தன் தங்கச்சி லட்சுமியை எங்கே என்று தேடினான் ராஜ்.
வீட்டின் ஒரு மூலையில் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள் லட்சுமி.

வளைகாப்பு போடும் மேடையில் இருந்து இறங்கி லட்சுமியிடம் சென்று அவளின் கையை பிடித்து கூட்டிக்கொண்டு வந்து அனைவரின் முன்னிலையிலும் மேடையில் லட்சுமியை ஏற்றினான் ராஜ்.

புருஷனை இழந்த ஒரு விதவை பொண்ணை இப்படியெல்லாம் சுப நிகழ்ச்சியில் முன்னாடி நிறுத்த கூடாது இது அபசகுனம் என்று அங்கிருந்த அனைவரும் கூறினார்கள்.

ஆனால் அவர்கள் கூறிய எதையும் ராஜ் காதுகளில் வாங்கவில்லை அவன் எதிர்பார்த்தது எல்லாம் லட்சுமி வளையல் போட தன்னுடைய மனைவியின் சம்மதம் மட்டும் தான்.
ஆனால் லட்சுமியின் அண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

தான் வளையல் போட்டுவிடுவது அண்ணிக்கு சங்கடமாக இருக்கிறது போல என்று நினைத்து மேடையில் இருந்து கீழே இறங்க பார்த்தாள் லட்சுமி.

ஆனால் லட்சுமியை இறங்க விடாமல் அவளின் கையை பிடித்து நிறுத்தினால் லட்சுமியின் அண்ணி.

அப்போதுதான் மெதுவாக எழுந்து நின்று லட்சுமியின் அண்ணி பேச தொடங்கினாள்.

கணவனை இழந்த பெண்கள் வளைகாப்பில் வளையல் போட்டுவிட கூடாது என்று யார் சொன்னது,
ஒரு உயிரை சுமந்து பிள்ளையை பெற்றெடுக்கும் தாய்மை உள்ள அனைத்து பெண்களுக்கும் இன்னோர் பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சியில் வளையல் போட்டுவிட்டு வாழ்த்தும் உள்ளது.
அப்படி பார்த்தால் என்னுடைய காதல் வாழ்க்கைக்காக சின்ன வயதிலேயே தன்னை பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்து கொண்டு இன்று தன்னுடைய கணவனையும் இழந்து விட்டு நிற்கிறாள் என் கணவரின் தங்கச்சி லட்சுமி.

லட்சுமி கணவனை தான் இழந்தாலே தவிர வாழ்க்கையை இன்னும் அவள் இழக்கவில்லை
எனக்கு முன்பே குழந்தையை பெற்று தாயானவள் அதனால இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் எனக்கு வளையல் போடும் தகுதி இங்கே இருக்கும் உங்களை போலவே லட்சுமிக்கும் இருக்கிறது என்று சொல்லிவிட்டு
வளையல் போட்டுவிட சொல்லி தன்னுடைய கையை லட்சுமியிடன் சிரித்த முகத்தோடு நீட்டினாள் லட்சுமியின் அண்ணி.

என்ன சொல்லுவது என்று தெரியாமல் கண்கலங்கிய படி தன்னுடைய அண்ணிக்கு வளையல்களை போட்டுவிட்டாள் லட்சுமி.

விதவை பொண்ண வளையல் போட சொல்லிட்டிங்க பாவம் வயிற்றில் இருக்கும் அந்த குழந்தைக்கு என்ன ஆக போதோ தெரியலயே என்று அங்கிருந்த பல பெண்கள் பேசுவது லட்சுமிக்கும்,அவளுடைய அண்ணிக்கும் காதுகளில் விழுந்தது.

மூட நம்பிக்கையில் முட்டாளாக இருக்கும் இந்த வாத்து மடையர்களுக்கு புத்தியில் உறைக்கும் படி நீயே ஒரு நல்ல பதிலை சொல்லு லட்சுமி என்று அண்ணி கூறினாள்.

அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த லட்சுமி அப்போதுதான் பேச தொடங்கினாள்.

புருஷனை இழந்த நான் வளையல் போட்டதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்க ஏதாவது ஆய்ரும் சொல்லுறிங்க.
ஆனால் கல்யாணமாகி ரொம்ப வருசம் ஆகியும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் அனாதை ஆசிரமத்தில் இருந்து குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் 27 பெண்கள் இந்த கூட்டத்தில் இருக்கிங்க அது யாருனு நான் சொல்ல விரும்பல
ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவே தகுதி இல்லாத நீங்க வளையல் போட்டுவிடும் பொழுது
பத்து மாதம் என்னுடைய வயிற்றில் சுமந்து ஒரு அழகான குழந்தையை பெற்று தாய்மையை முழுமையாக அடைந்த நான் வளையல் போட்டுவிட கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ஒரு கேள்வியை அனைவரின் முன்னிலையிலும் கேட்டாள் லட்சுமி

[#விதவை part 7

லட்சுமி கேட்ட கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

அதன் பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நீங்கள் வளையல் போடும் போது கணவனை இழந்து ஆனால் முழு தாய்மை அடைந்த நான் வளையல் போட கூடாதா என்று உங்களை பார்த்து கேட்டேன்.

நான் உங்களை பார்த்து குழந்தை பெற்றுக்கொள்ள தகுதி இல்லாத பெண்கள் என்று சொல்லும் போது உங்களுடைய இதயத்தில் கத்தியை இறக்கியது போல இருக்கும்,
ஒரு பெண்ணுடைய வலியை தரம் தாழ்த்தி இன்னொரு பெண்ணே பேச கூடாது என்பது தான் என்னுடைய கருத்து
ஆனால் நீங்கள் என்னுடைய வாழ்க்கை சூழ்நிலையை பார்த்து ஒதுக்கி வைத்து பேசும் போது என்னுடைய வலியை உங்களுக்கு உணர்த்த எனக்கு வேறு வழி தெரியவில்லை.
உங்களை அப்படி கூறியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள்.
ஆனால் நான் உங்கள் மனதை புண் படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டதை போல என்னை போன்று பல விதவை பெண்களை அவர்களின் வீட்டு விஷேசங்களிலே கூட கலந்து கொள்ள முடியாமல் மூட நம்பிக்கை என்ற பெயரால் முட்டாள் தனமாக பேசி பல விதவை பெண்களை ஒதுக்கி வைத்து பேசி வார்த்தைகளால் உயிரோடு கொல்லுறிங்களே அப்படி உங்களின் நஞ்சு பேச்சால் மனம் உடைந்து துடிக்கும் பெண்களிடம் உங்களால் இப்போது தைரியமாக மன்னிப்பு கேட்க முடியுமா என்று மிகவும் ஆக்ரோசத்துடன் கேட்டாள் லட்சுமி.

அனைவரும் பதில் கூற முடியாமல் அமைதியாக இருந்தனர்.

கணவனை இழந்த என்னை போன்ற பெண்களுக்கு விதவை என்று பெயர் வைத்து எங்களுடைய வாழ்க்கை சுதந்திரத்தை முற்றிலும் பறித்து மூலையில் ஒடுங்கி போய் உட்கார வைக்கும் உங்கள் சமுதாயம்.
மனைவியை இழந்து தனியாக இருக்கும் ஆண்களுக்கு மட்டும் ஏன் எந்தவொரு நிபந்தனைகளும் போடுவதில்லை??

கேட்டால் என்ன சொல்லுவிங்க மனைவி இறந்தாலும் ஒரு ஆண் வேலைக்கு போனால் தான் அந்த குடும்பம் வாழ முடியும் என்று உங்களுக்கு நீங்களே ஒரு காரணத்தை வைத்துக்கொள்விங்க.

அதேபோல் கணவனை இழந்த பெண்கள் நாங்கள் வெளியே வந்தால்.
அடுத்த நிமிடமே அந்த பொண்ணு போகட்டும் அவ முகத்தில் முழிச்சுட்டு போனால் போற காரியம் விழங்காது சொல்லுறிங்க.
அய்யா சாமி உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன் பதில் சொல்லுங்க என்று லட்சுமி கூறினாள்.

கர்ப்பமான பொண்ணுக்கு விதவையான பெண் வளையல் போட்டா வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆய்ரும் சொல்கிற நீங்க
நாளைக்கே அந்த பொண்ணுக்கு பிரசவ வலி வந்து அந்த பொண்ண மருத்துவமனையில் சேர்த்த பின்பு அந்த பொண்ணுக்கு பிரசவம் பார்க்க போற டாக்டர் ஒரு விதவையா இருந்தால் அப்போது கணவனை இழந்த நீ பிரசவம் பார்த்தால் தாய்க்கும்,குழந்தைக்கும் ஆகாது என்று அந்த டாக்டரிடம் சொல்லுவிங்களா என்று ஒரு கேள்வியை அனைவரின் முன்பும் கேட்டாள் லட்சுமி.

உங்கள் யாராலும் பதில் சொல்லவே முடியாது.
ஏனென்றால் தங்களுடைய சுயநலத்திற்கு ஒரு மூட நம்பிக்கையை உருவாக்குவதும் நீங்கள் தான்
அந்த மூட நம்பிக்கையை உடைப்பதும் நீங்கள் தான்
இதற்கு இந்த சமுதாயம் பயன்படுத்தி கொள்ளும் ஒரு பகடை காய் தான் பெண்!!!!!

லட்சுமி பேசியதை கேட்டதும் ஒரு ஆண் எழுந்து பெண்களுக்கும் ஆண்களை போன்று சம உரிமை குடுத்துள்ளோம் அதனால பெண்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நீங்க சொல்லுறத ஆண்கள் நாங்க வன்மையாக கண்டிக்கிறோம் என்று ஒரு ஆண் மிகவும் கோபமாக லட்சுமியிடன் கூறினார்.

இதுவரை கணவனை இழந்த பெண்ணை இன்னோர் பெண் பார்க்கிறாள் என்பதை பார்த்தோம்
இனி ஒரு ஆண் அந்த பெண்ணை எப்படி பார்க்கிறான் என்பதை பார்ப்போம்

[#விதவை part 8
கதையின் முடிவு எழுத்துகள் பற்றாக்குறையால் தனியாக பதிவு செய்துள்ளேன் தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே நன்றி..,