...

6 views

மகளின் அகராதி



      மகளின் அகராதி!! 


மார்கழி பனி ஆதவனுக்கு இன்னும் வழிவிடாததால் மணி 6ரை தொட்டும் இன்னும் இருள் சூழ்ந்து இருந்தது ...!

இதை சோம்பல் முறித்தப்படி எழுந்துப்பார்த்த பீரித்தி ..!

அட இன்னும் விடியலையான்னு ..மீண்டும் படுக்கைக்கு போனவளை ...!

டாய் ..வாலு ...எழுந்திரு ...மணி என்னாகுதுன்னு பார்த்தியான்னு ...!

ஒரு கனீர் குரல் ...பீரித்தியின் ...காதைப் பதம் பார்க்க ...!

அப்போ ...தான் மான் போன்ற துள்ளும் விழியை கடிகாரத்தின் பக்கம் திருப்பிய பீரித்தி ...

ஓ...மை....காட் ...மணி ஆறா ...?

இன்னைக்கு வேற ஏதோ ...முக்கியமான நபர் வரார்ன்னு ஆபீஸ்க்கு சீக்கிரமா ...வருமாரு நேத்தே மேனேஜர் 

ஒரு விரலை காட்டி ...காட்டி ...சொன்னாரே ....ன்னு தலையில்  கைவைத்த ...படி இருக்கும் பீரித்தியை ...!

கையில் ஆவிப்பரக்கும் டீயுடன் வந்த சுந்தரத்தை ...!

ஒரு வார்த்தையும் ...சொல்லாமல் அமைதியாகவும் அதேசமையம் கலக்கத்துடனும் காணப்பட்ட பீரித்தியை ...!

தலையில் கைவைத்து டீயை குடிக்கும்படி ...!நீட்டினான் சுந்தரம் ..!

என்னடா ஆபிஸ் கவலையா? ன்னு ...சுந்தரம் கேட்க ...!

ஆமா என்பதுப்போல்...பீரித்தி தலையை ஆட்ட ...!

இப்ப தான் ..அசோக் போன் பண்ணி ..மீட்டிங் வேற எங்கையோ ஷிப்ட் பண்ணிட்டாங்களாம் ...அதனாலை ஆபிஸ் லீவாம் ...என்று சுந்தரம் ....!சொல்ல ...!

ஓ...மை....காட் ....லீவா. ஜாலி ..தான்..ன்னு சிறுப்பிள்ளைப்போல் துள்ளி குதித்தாள் பீரித்தி.!

சரி ...சரி ...நீ ...இன்னும் கொஞ்ச நேரம் தூங்குமா ..நா சமையலை முடித்துட்டு ...!

உன்னை வந்து எழுப்புறேன் ...என்ன? ன்னு சுந்தரம் சொல்ல ....!

கண்ணோரம் சிறு கசிவுடனே தலையை ஆட்டினாள் பீரித்தி ...!

இருபது வருடமா எந்த ஆதரவும் துணையும் இல்லாமல் பீரித்தியை வளர்த்த உத்தமரை நினைத்து வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு ...!

வாசல் கதவை திறந்துக்கொண்டு இயற்கை அழகை இரசித்த பீரித்தியை ஒரு விளம்பரம் பீரித்தியை வெகுவாக ஈர்க்க ...!

என்னன்னு ..இன்னும் தெளிவாக படிக்க ...செருப்பை மாட்டிக்கொண்டு விளம்பரம் ஒட்டப்பட்ட சுவரை நோக்கி நடந்தாள் பீரித்தி ...!

விழிகளை விரித்துக்கொண்டே அதில் உள்ள போன் எண்ணையும் முகவரியையும் குறித்துக் கொண்டு மீண்டும் வீட்டுக்கு வர ..!

வாசலில் ..சுந்தரம் ..என்னம்மா எங்கப்போனன்னு கேட்க ...!

குறித்து வைத்திருந்த முகவரியையும் எண்ணையும் காட்ட ..!

அட ..சூப்பர் ...சூப்பர்...ன்னு சுந்தரம் வியந்து இரு கைகளையும் ஆனந்தமாய் தட்ட ...!

அந்த சந்தோஷத்தில் பீரித்தியும் இணைந்து கொண்டாள் ...!

உடனே ...விளம்பரத்தில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு ...!

தாங்கள் கலந்துக்கொள்வதை உறுதி  பண்ணிவிட்டாள் ..பீரித்தி.!

ஊருக்கு போய் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என்பதால் ..!

ஆபிசுக்கு லீவு சொல்லிவிடலாம் என்று ஆபிஸ் எண்ணை டயல் பண்ண ...!

முழுரிங் போய் கட்டானது ..!

ஓ...நோ ...ஆபிசில் யாரும் இல்லைப்போல ...சரி ..சாயங்காலம் ...!

அசோக்கிடம் சொல்லிடலாமுன்னு ...போனை ...வைத்து விட்டு ..!

தனக்கு ரொம்ப பிடித்த பூரிக்கிழங்கை ...சுந்தரம் எடுத்து வந்து ..!

பீரித்திக்கு ஊட்ட ...!

தினமும் சாப்டும் அளவை விட அதிகமாகவே சாப்டாள் பீரித்தி ..!

தனக்கு பிடித்த பாடலை கேட்பதும் பிடித்த புத்தகத்தை படிப்பதும்மா ..!

நேரம் போனதில் மணி ...மாலை 6.15 ...காட்ட ..!

அசோக்கு போன் பண்ணி ..இரண்டு நாள் லீவையும் சொல்லி விட்டு ...!

மேனேஜர்க்கு ஒரு மெயாலையும் அனுப்பி விட்டு ..!

நிம்மதியாய் உறங்கப் போனவளை ..!பழைய நினைவுகள் ..!

மீண்டும் மனதை வருட ...கொஞ்சம் வலியும் கொஞ்சம் கண்ரையும் ..!

வரவைத்தது பீரித்திக்கு ..!

அதை துடைத்துக் கொண்டு உறங்க முற்பட்டவளை ...ஒரு குரல் ..!

செவியை பதம்பார்க்க ...!

என்னன்னு ..எட்டிப்பார்த்தவளுக்கு ஒரே சிரிப்பு உதட்டை பிளக்க செய்தது...!

சுந்தரமோ தனக்கு பிடித்த பாட்டை பாடிக்கொண்டே கையும் காலையும் இங்கையும் அங்கையும் ஆட்டும் காட்சி தான் ...!

அந்த சிரிப்பின் உடனே உறங்கியும் போனாள் பீரித்தி ..!

காலை அழகாய் விடிய ..!

இருவருக்குள்ளும் வியப்பும் பரபரப்பும் உடன்பிறவா பிள்ளைப்போல் ஒட்டிக்கொண்டது ..!

அதே ஆர்வத்துடனே ...!தேனிக்கு பயணமானார்கள் !! 

தான் புக் பண்ண அதே எண்ணுக்கு மீண்டும் அழைப்பு விடுத்து தாங்கள் வரவை உறுதிப்படுத்த ...!

இதைப்பார்த்த சுந்தரமோ ஆனந்த புன்னகையை பீரித்திமேல் வீச ...!

இதை கவனித்த பீரித்தியோ ....!என்னப்பா ..இப்படி பூரிப்பு...ன்னு ...!

கேட்க...!

ஒண்ணும் இல்லம்மா ...! இந்த நிகழ்ச்சி எல்லாம் டிவியில் மட்டும் தான் ...!

பார்ப்போம் இப்ப நாமலே அதில் ...கலந்துக்கப் போவதை நினைத்து தான் ஒரே பூரிப்பா இருக்கும்மா ..!

ஓ...ஓ..ன்னு சின்ன சிரிப்பை உதட்டில் வரவைத்துக் கொண்ட பீரித்தியோ ..!

முதல்ல நம்மல்ல செலக்டு பண்ணறாங்களான்னு தெரியலப்பா ...அதுக்குள்ள ..ன்னு ..பீரித்தி ...இவ்வளவு நேரம் இருந்த துள்ளல் குறைந்து ...சொல்ல ..!

அட..என்னம்மா ...நீ ..நீ..இவ்வளவு பெரிய ஜீனியஸ்ட் எவ்வளவு பெரிய கம்பனியில் ...வேலை செய்யுற ...உன்னை பார்த்ததும் உள்ளப்போங்கன்னு ...சொல்லுவாங்கப் பாரும்மான்னு ...மகளின் பெருமையை பூரிப்பாய் ...!

சொல்லும் சுந்தரத்தை ஆர்வம் குறையாமல் பார்த்தாள் பீரித்தி..!

சரிப்பா ...கொஞ்ச நேரம் அப்படியே கண்ணை மூடிக்கொண்டே வாங்க ...!

அதற்குள் தேனி ...வந்து விடும் என்ன?

ம்ம்...சரிம்மான்னு கண்களை மூடிக்கொள்ள..!

பீரித்தியும் ..காலை சீக்கிரம் எழுந்த அசதியின்னாலையே உறங்கிப் போக ..!

சிறிது ..நேரத்தில் ..பஸ்..நின்றது ..!

உடனே விழித்துக்கொண்டு ...ஒரு பெரிய ஆவலுடனே ..பஸ்சை ..விட்டு கீழ இறங்கினார்கள் ...இருவரும் ...!

பீரித்தி ...தன் கையில் உள்ள முகவரியை அங்குள்ள ஒரு சிலரிடம் ...

காட்டி இடம் கேட்க ...ஒரு சிலர் மறுத்தும் ஒரு சிலர் சில வழிகளை சொல்லியும் ...

எப்படியோ குறிப்பிட்ட இடத்தை அடைந்தார்கள் ..!

கட்டிடமோ பிரம்மாண்டம் ...அதைவிட அங்குள்ளவர்களோ ரொம்ப நீட்டாக காணப்பட்டார்கள் ...!

இதையெல்லாம் இரசித்தவாறே ...உள்ளே சென்று பதிவெண்ணை காட்டி குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்கே சென்று அமரும் படி அழகாக ...!

புன்னகையித்தபடியே சொன்னாள் ஒரு அழகு பதுமை ..!

அவளை இரசித்து விட்டு படிகட்டில் ஏறி சென்று பார்த்தவளுக்கு ஒரே அதிர்ச்சி ...!

நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் அமர்ந்திருக்க ...!அதில் ஒருவர் கூட....!

ஆண்கள் இல்லை ...!

அனைவரும் பெண்களே ...பீரித்தி மட்டும் தன் தந்தையுடன் வந்திருந்தாள் ...!

என்னம்மா இதுன்னு சுந்தரம் கேட்க ...!

அதான்பா எனக்கும் புரியலன்னு விழியை விரித்து பீரித்தி சொல்ல ...!

கருமைநிற கண்ணாடியை திறந்துக்கொண்டு கையில் சின்ன பேட்டையும் ஒரு பென்னையும் வைத்துக்கொண்டு அனைவரிடமும் சின்னதாய் ஒரு சிரிப்பை பரிசாக அளித்து விட்டு ..!

பீரித்தியிடமும் ..சுந்தரிடமும் நெருங்கி ..!

ஹாய் ...சொல்லி விட்டு அவர்களின் பதிவெண்ணை வாங்கி குறித்துக் கொண்டு ...!

அப்புறம் ...உங்க அம்மா எப்ப வருவாங்கன்னு ..அந்த பெண் சிரித்தப்படி 

பீரித்தியிடம் கேட்க...!

ஏன் மேம்முன்னு ...கொஞ்சம் ஆச்சரியமாகவும் லேசான பதட்டமாகவும் கேட்க....!

பின்ன அவங்க தானே இந்த ஷோவுக்கு மெயினே ...! அவங்க இல்லாம நீங்க மட்டும் எப்படி ஸ்பாட்டிஸ்மென்ட் பண்ணுவிங்க ...!

இது ...ஒன்லி ...ஒன் ...லேடிஸ் ஷோ ...ன்னு பட்டுன்னு சொன்ன ..!

அந்த பெண்ணை வியப்பாகவும் பதட்டம் குறையாமலும் பார்த்தப்படி நின்றாள் ..!

பீரித்தி...!

இதை துளியும் எதிர்பார்க்காத சுந்தரமோ சிறுக்குழந்தைப் போல் துள்ளல் இருந்த முகத்தில் கருமையான கோடு வந்தாடியது ..!

ஏன் மேம் நீங்க நோட்டிசை முழுமையா படிக்கலையான்னு ...!அந்த பெண் கேட்க ..!

ம்ம்..படித்து தான் எங்கள் வரவை உறுதி செய்தேன் மேம் ..!

அப்போ தான் ...உணர்ந்தாள் ...சுந்தரம் இரண்டுமாக அவளுக்கு தெரிவதை ..!

சிறு கண்ணீர் ...எட்டிப்பார்க்க ...அதை வெளிக்காட்டாமல் அந்த பெண்மணியிடம் ..

நானும் ..என் தந்தையும் இதில் விளையாடலாமா? ன்னு ..கேட்க ..!

நோ ..என ..ஒற்றை வார்த்தையை சொல்லிவிட்டு ...கடந்து போனாள் ...!

அந்த பெண்மணி ..!

அங்கு இருந்தவர்களோ ..பீரித்தியை ..பாவமாகவும் புன்னகையுடனும் ..!

பார்ப்பதைப் பார்த்த பீரித்தியோ..!

மூக்கு சிவந்தது..!

சரிம்மா ..நாம்ம கிளம்புவோம் ..என ..கொஞ்சம் வேதனையாக...!சொன்ன சுந்தரத்தை ....!

இருங்கப்பான்னு ...விறு...விறுன்னு ...அந்த நிகழ்ச்சியை வழங்கும் ...!

நிறுபர்களையும் ...தலைமையையும் ...நான் ...பார்க்க வேண்டும் என...!

விசிடர் ...அறையில் அமர்ந்திருந்த லீனாவிடம் ..பீரித்தி ...கேட்க....!

நோ...நோ..மேம் ...சாரை எல்லாம் பார்க்க முடியாது ..!

பீரித்தி...பல முறை கேட்டும் நோன்னு ...சொல்ல ...!

கடுப்பான ...பீரித்தியோ ...மிஸ்டர் சுரேஷ் என ..!

கொஞ்சம் குரலை உயர்த்தி கேட்க ...!

பீரித்தியின் ...சத்தம் கேட்டு ...உள்ள இருந்த சுரேஷ் ..நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் உமாவும் ...வெளியே ..வந்து ...!

வாட். ...வாட்..ஹாப்பன் ...?

ஏ...நீங்க சத்தம் போட்டுட்டு இருக்கிங்கன்னு ....!உமா கேட்க..!

நடந்ததை ஒண்ணு விடாமல் சொல்லி ...முடித்த பீரித்தியை ....!

ஆமா..மேம் ...இது லேடிஸ் ...ஷோ..வருச வருசம் நடத்துரோம் ...!

என்று ...தன் பக்க நியாத்தையும் ..உங்க உணர்வையும் நாங்க மதிக்கிறோம் ..!

என்று சுரேஷ் ...சொல்ல....!

இதையெல்லாம் அமைதியாக ...பார்த்துக்கொண்டு இருந்த 

சுந்தரமோ ...!

என்னம்மா ...இது .....வாம்மா ...நாம கிளம்புவோம் ...இந்த நிகழ்ச்சி ...!

இல்லன்னா வேற நிகழ்ச்சி ...ன்னு சுந்தரம் சொல்ல....!

ஆம ...இவரு ...என்ன பின்னாடி இருந்து ஒரு குரல் வர...! 

கடுப்பான ...பீரித்தியோ..!

என் அப்பாவை ..இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முடியுமா? முடியாதா...!

என்று பீரித்தி....கொஞ்சம் காட்டமாகவே கேட்க.!

நோ....என..உமா சொல்ல ...!

சுந்தரத்தை கொஞ்சம் மேலும் கீழுமாக பார்த்த சுரேஷ்சோ ...!

சரிம்மா ...நீங்களும் உங்க அப்பவும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளலாம் ...!

என்று சுரேஷ் ...சொல்ல ...!

பீரித்திக்கோ ...ஆச்சரியம் பொங்கி ..முகம் முழுவதும் ஆயிரம் வாட்ஸ்ப் போல் ....ஜொளித்தது...!

இதைக்கேட்ட கூட்டத்தில் ஒருப்பெண்மணி ...இது தவறாச்சே...!

பெண்கள் நிகழ்ச்சியில் பெண்கள் மட்டும் தான் கலந்துக்கொள்ளனும் ...!

இது...பெண்ணுரிமை..! நாங்க எல்லாரும் அம்மா பொண்ணோடையும் வந்து இருக்கோமே ..இது என்ன முட்டாள் தனமா? ...என ஆளாளுக்கு ....போர்க்கொடி தூக்க ...!

மாதர் சங்க தலைவியும் ...இதில் இணைந்துக் ..கொள்ள ...சொல்லவா வேணும் அந்த இடமே ...ஒரு போர்களமா மாறியது ...!

இதை கொஞ்சமும் எதிர்ப்பார்காத சுந்தரமோ ..!

கொஞ்சம் அமைதியா இருங்கன்னு ...தன் வலுவை மீறி சொல்ல...!

கூச்சலிட்ட அனைவரும் ஒரு நிமிடம் அமைதியானார்கள்....!

நடுவில் வந்த சுந்தரமோ ...உங்களில் ஒரு பெண்மணியை கூடவா என்னைப்போல் தந்தை வளர்த்தது இல்லை?

இதை மட்டும் கேட்டுட்டு ...!

வாம்மா...நாம ...கிளம்புவோம் ..!

பெண்ணுரிமையாம் ...பெண்ணுரிமை ...ஒரு ஆழமான அன்பை.!

புரிந்துக்கொள்ளாத இந்த நிகழ்ச்சிக்கு நாம வந்ததே தவறும்மா...!

வா....வா....ன்னு. பீரித்தியின் ...கையைப் பிடித்த நொடி ...!

மாதர்சங்க ...தலைவி கீதா ...சுந்தரத்தின் ..முன் கண்ணீருடன் வந்து ...நின்று ...என். என்....தந்தையும் தாயுமானவர் ..தான்....!

என்று சிறு ..விம்மலுடன் ..சுந்தரத்தின் ...கையைப்பிடித்துக் கொண்டு..!

முதல் ஒளிப்பதிவில் ....பங்கேற்கும் முதல் நபரே ..இந்த ...தாயுமானவரும் அவரின் அருமை மகள் ..பீரித்தியும் தான் என்று கீதா ..சொன்ன நொடி...அங்குள்ளவர்கள் அனைவரும் ...ஆனந்தத்தில் ...துள்ளினர் ..!

          அன்பான நிழலும் கீரிடம் சுமக்கும்!

                  முற்றும்!!


                  ஸ்டெல்லாமேரி எம் ஜே

                      புதுவை ..9