என்றேனும் ஒரு நாள்
உனக்கு என் தவிப்பின்
வரி (வலி)களின்
அர்த்தம் தான்
புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!!
ஆனால் இப்போதுதான்
தெரிகிறது உனக்கு
புரியாதது என்
தவிப்பு மட்டுமில்லை
என் இதயத்தின்
இராகமும் தான் என்று !!
என் மனம் கல் என்றாய்
ஆனால் இப்போது தான்
தெரிந்தது !!உன் மனமும்
கல் தான் என்று
எனை மயக்கிய
"கள்தான்" என்று!!
உன் நினைவெனும்
மனதின் கள் குடித்த
என் மனதினை
மீட்டெடுக்க இயலவில்லை !!
தெரியவில்லை !!
நீ அணைக்கும்போது
அறிந்து கொள்கிறது
எனது "விழிகள்"
நீ அதட்டும்போது
அடுத்த நொடியே
அடங்கிக் கொள்கிறது
எனது "இதயம்"..
நீ "பைத்தியம்"
என்கிறாய் ...
இது உண்மை தானே
உன்னை மட்டுமே
நினைத்து நினைத்து
பைத்தியமாகிப்
போன என் இதயம்
சுமக்கும் நானும்
ஒரு மிகைப்பைத்தியம் தானே!!!
என் உள்ளம்
உனக்கு புரியவில்லையா!!
அல்லது புரிந்தும்
தயங்கி நிற்கிறாயா??
உன் விலகலை
தாங்கும் சக்தி என்
வரிகளுக்கும் இல்லை !!
எனது விழி களுக்கும்
இல்லை !!எனது
வலிகளுக்கும் இல்லை!!
என்னை நீ கடந்து
சென்றாலும்
கடவுளைப் போன்று
ஒவ்வொரு முறையும்
உன்னை மட்டுமே
அணைக்கிறேன் ....
என்னை அனையாது
அணைத்துக் கொள்வது
நீ மட்டுமே என்பதால் ...
ஒரே ஒருமுறை மட்டும்
என் உள்ளத்தின்
பக்கங்களை
முழுமையாக
புரட்டிப் பார்த்து இதழ்
பதித்து சொல்லிவிடு!!
நானும் நேசிக்க
சிறந்தவள் தான் என்றும் ..
எனக்குள்ளும்
மெய்யுணர்வுண்டு என்றும்
அதனுள்ளே என்றும்
வற்றாத கடல் நீர் சூழ்ந்த
அன்பு குறையாத
காதல் அலை உண்டு என்றும்....
உன்னை நித்தமும்
முத்தம் கேட்டு
இம்சை செய்யும்
இம்சைக்காரி நான்தான் என்றும்
#yqslaks
#நீயும்_நானும்
#ச_லக்ஷ்மி
© All Rights Reserved
வரி (வலி)களின்
அர்த்தம் தான்
புரியவில்லை
என்று நினைத்திருந்தேன்!!
ஆனால் இப்போதுதான்
தெரிகிறது உனக்கு
புரியாதது என்
தவிப்பு மட்டுமில்லை
என் இதயத்தின்
இராகமும் தான் என்று !!
என் மனம் கல் என்றாய்
ஆனால் இப்போது தான்
தெரிந்தது !!உன் மனமும்
கல் தான் என்று
எனை மயக்கிய
"கள்தான்" என்று!!
உன் நினைவெனும்
மனதின் கள் குடித்த
என் மனதினை
மீட்டெடுக்க இயலவில்லை !!
தெரியவில்லை !!
நீ அணைக்கும்போது
அறிந்து கொள்கிறது
எனது "விழிகள்"
நீ அதட்டும்போது
அடுத்த நொடியே
அடங்கிக் கொள்கிறது
எனது "இதயம்"..
நீ "பைத்தியம்"
என்கிறாய் ...
இது உண்மை தானே
உன்னை மட்டுமே
நினைத்து நினைத்து
பைத்தியமாகிப்
போன என் இதயம்
சுமக்கும் நானும்
ஒரு மிகைப்பைத்தியம் தானே!!!
என் உள்ளம்
உனக்கு புரியவில்லையா!!
அல்லது புரிந்தும்
தயங்கி நிற்கிறாயா??
உன் விலகலை
தாங்கும் சக்தி என்
வரிகளுக்கும் இல்லை !!
எனது விழி களுக்கும்
இல்லை !!எனது
வலிகளுக்கும் இல்லை!!
என்னை நீ கடந்து
சென்றாலும்
கடவுளைப் போன்று
ஒவ்வொரு முறையும்
உன்னை மட்டுமே
அணைக்கிறேன் ....
என்னை அனையாது
அணைத்துக் கொள்வது
நீ மட்டுமே என்பதால் ...
ஒரே ஒருமுறை மட்டும்
என் உள்ளத்தின்
பக்கங்களை
முழுமையாக
புரட்டிப் பார்த்து இதழ்
பதித்து சொல்லிவிடு!!
நானும் நேசிக்க
சிறந்தவள் தான் என்றும் ..
எனக்குள்ளும்
மெய்யுணர்வுண்டு என்றும்
அதனுள்ளே என்றும்
வற்றாத கடல் நீர் சூழ்ந்த
அன்பு குறையாத
காதல் அலை உண்டு என்றும்....
உன்னை நித்தமும்
முத்தம் கேட்டு
இம்சை செய்யும்
இம்சைக்காரி நான்தான் என்றும்
#yqslaks
#நீயும்_நானும்
#ச_லக்ஷ்மி
© All Rights Reserved