...

16 views

சளி இருமல் காய்ச்சல்
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மிகக் கடுமையான காலம். நல்ல செய்திகள் எதுவும் கேட்கவில்லை. கேட்கும் செய்திகளும் நல்லதாக இல்லை. என் மனைவிக்கு எட்டு நாட்களாக காய்ச்சல். மூன்று நாளாய் விடாது இருமல். முதுகு வலி. ஆஸ்பத்திரி எதுவும் இல்லை. மாத்திரை எடுத்து வந்தாலும் டாக்டரிடம் சந்தித்து பார்த்த திருப்தி இல்லை. சமயங்களில் அவள் படும் கஷ்டத்தை பார்த்து அழுகை வருகிறது. எனக்கு நான்கு நாளில் காய்ச்சல் சரியாகி விட்டது. இருந்தாலும் அவளுக்கு உடல் நலமில்லை அதனால் நான் வீட்டு வேலைகளை பார்த்தால் இளைப்பு வருகிறது. பிள்ளைகளும் உளவியல் ரீதியாக வீக்காக உள்ளனர். கடவுளை தான் வேண்டி வருகிறேன். இதுவும் கடந்து போகும் என்று. இனி நல்லது மட்டுமே என் வாழ்வின் வழி நெடுக தொடரும்.