...

10 views

அவளும் அவனும்!
அழகிய காவிய காதல் அது!
கைக்கோர்த்து கடற்கரை
நடந்திட மால் - விடியும் வரை
விழிகள் விழித்து பேசியது இல்லை - தேடி தேடி கண்டது இல்லை நினைத்த தருணம்.
விழிகள் தேடும்போது எதார்த்த பார்வையில் வளர்த்த காதல் .
விழியின் உரையாடலில் தொடங்கி விரலின் நுனி மட்டுமே தொட்ட காதல் !
அவளின் மௌனத்தை படித்தவன் அவன்! அவனின் வார்த்தைகளை இரகசியமாய் வரிகளாக வடித்தவள் அவள்! அவளுள் அவனின் பெண்குணமும் அவனுள் அவளின் ஆண் குணம் தென்பட ! இணைபிரியா உறவாக உள்ளத்தில் வளர்ந்தது இருமனமும் அறியாமல்!
அவளின் மௌனத்தை படித்து கனவுகள் மெய்ப்பட செய்து தந்தையாய் மாற ! அவனின் முதல் மகள் ஆகிப் போனாள் !
யார் செய்த தவறோ !
புரிந்தும் புரியாமல் போனது !
இருமனங்கள் ...
விழிகள் மட்டுமே போதும் என்றமனங்கள் ... சிலரின் நரம்பில்லா நாக்கால் ...
தொடர்பற்றுபோனது .....
பத்து வருடம் மனதில் சுமந்து
பத்தொன்பது திங்கள் வளர்ந்து
பத்து நொடிகளில் எரிக்கப்பட்டது! யாரோ சொல்லிய வார்த்தைகள் நம்பி !
அவளும் அவனும் கொட்டிய சொற்கள்...
அல்லப்படமுடியாது என்று அறிந்தும்!
அவளின் மௌனத்தை படித்தவன்
அவளின் மனதை படிக்க மறந்திட்டானோ !
அவனின் வார்த்தைகளை வடித்தவள் !
அவனின் கோவத்தை
செதுக்கிட மறந்திட்டாலோ !
______________

தவறு என்று உணரும்
தருணம் சற்று
தாமதமின்றி மன்னிப்பு
கேட்பதில்!
தவறொன்றுமில்லை !
உங்களை நேசித்த மனம்
உங்கள் தவறை நினைப்பதில்லை....‌‌
தவறென்று நீங்கள் உணர்ந்திட்டால் போதும்!
தயக்கமின்றி
மன்னிப்பு கேளுங்கள்!
நாம் நேசித்த மனதிடம்!


#அவளும்அவனும்
#தமிழ்பக்கம்
#காதல்

© Nuradhaag