...

12 views

என் காதல் கவிதையே.....
என் கனவு காதலனே, உனை காணாமல் நீ சிரிக்கும் நினைவிலேயே கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து போகிறேன். உன் கள்ள சிரிப்பை காட்டி கடத்தி சென்றாயே என் அழகே, உன் தேக வாசனையை இளஞ்சூட்டில் சுவாசிக்காமல் வாடி வதங்கி உயிரற்று கிடக்கிறேன் அன்பே, என் காதலை களவாடிய உனக்கு என்னை களவாடுவதற்கு நேரமில்லையா என் மணாளனே, உனை பார்த்த நினைவுகளேல்லாம் தேனாய் மெய்மறக்கிறது. என் வாழ்வில் உனை பார்த்த ஒவ்வொரு நொடியைம் நெடிய பக்கங்களாகபடைத்துள்ளேன். உன் காதலை தெரிவிக்கும் போதெலாம் உனக்குள் இன்னும் ஆழமாய் தொலைகிறேன் கண்ணே,அத்தனையும் அழகு உன்னிடம் யாம் பெற்ற ஊடலும கூடலும், உன்னுடன் வாழ பழகிய என்நாட்கள் அனைத்தும் நீயின்றி என் உயிரை வதைக்கிறதே காதலனே.உனை இரசிக்கும் ஒவ்வொரு நொடியும் எனை மறக்கிறேன் மாயவனே, காலம் தாழ்த்தாமல் உன் சுவாசத்தினால் உயிர்பித்துவிடு என் காதல் கவிதையே........
© Geevagaindhu