...

5 views

( 12 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .
( 12 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .


பச்சை பசேலென இருக்கும் கிராமம் . எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல்கள் . ஆங்காங்கே தென்னமரங்கள் நின்று கொண்டிருந்தது . ஆற்றில் சலசலவென தண்ணீர் ஓடியது . வயல்களில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் . அங்கு உள்ள பெரிய க்ரௌன்டில் சிறிய குழந்தைகள் அனைவரும்  விளையாடி கொண்டிருந்தனர் .  அப்போது  அங்கு ஒரு பெண் வந்தாள் . ஐந்தரை அடி இருப்பாள் . வெள்ளை நிறம் . அந்த காலை வேலை குளிரில் கன்னங்களும் , முக்கும் சற்றே சிவந்து இருந்தது . பச்சை கலர் பாவடையும் , அதே பச்சை இலர் ப்ளௌசும் , இளம் பச்சை கலர் தாவனியும் அனிந்து இருந்தாள் அவள் . அவளை பார்த்ததும் சிறிவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டனர்  .


" எதுக்கு டா ஓடுரிங்க . உங்க கிட்ட நா நேத்து என்ன சொன்னேன் . என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்கனும்னு சொன்னேன்ல . ஆனா நீங்க , நா வரதுக்குள்ள , விளையாட ஆரம்பிச்சுட்டிங்க . " என்று கோபித்து கொண்டாள் அவர்களிடம் .

" அக்கா . சாரிக்கா . நீ வா விளையாடுலாம் . " என்று கூறினான் ஒரு சிருவன் .

" போ . நா வரல . " என்று இன்னும் முறுக்கி கொண்டாள் அந்த பெண் .


" அக்கா . நீ வரவர ஓவரா பண்ற . வா விளையாடுலாம் . " என்ற அந்த சிறுவன் , அவளின் கையை பிடித்து இழுத்தான் .


" அடேய் . எங்க அம்மா எனக்கு ஒரு வேல குடுத்துருக்கு . நா போய் அத பண்ணிட்டு வந்தர்ரேன் . " அந்த பெண் . அப்போது தூரத்தில் அவள் தாய் வருவது போல் இருக்கவும் " டேய் , எங்க அம்மா வந்துருச்சு டா . இப்போ எனன பண்றது . " என்று கேட்டாள் .


" எங்க கிட்ட கேட்டா . எங்குளுக்கு தெரியாது . " ஒரு சிறுவன் .


" சரி டா . நான் போறேன் . " என்றவள் , குறுக்கு வழியில் அவழ் வீட்டுக்கு ஓடி வந்தாள் . அங்கு அவள் தாய் எப்படி விட்டு சென்றாரோ அப்படியே இருக்க , அவள் அதை வேகவேகமாக சுத்தம் செய்து முடித்தாள் . அவள் சுத்தம் செய்து முடிக்கவும் , அவள் தாய் உள்ளே வரவும் சரியாக இருந்தது .


அவளின் தாய் பெயர் விசாலாக்ஷி . அவரின் மகள் தான் இவள் . பெயர் கண்மணி . " அடியேய் கண்மணி . எல்லா வேலையும் செஞ்சுட்ட போல . சரி , இந்த சின்ன பசங்க கூட வளையாட போறேன்னு சொல்லிட்டு , எங்கையும் திரியாத . வயசு பதினெட்டு ஆகுது . இன்னும் கொஞ்ச நாள்ல வேற வீட்டுக்கு போறவ . இப்டியா சின்ன பசங்க கூட சேந்துக்குட்டு ஊர சுத்துவ . " என்று எப்போதும் போல் வசை பாடினார் அவளின் தாய் . இவளும் அதை எல்லாம் கேட்பது போல் தலை குனிந்து நின்றிருந்தாள் . " இப்டி குனிஞ்சு நின்னுட்டு இருந்தா மட்டும் போதாது . " என்று அதற்கும் ஒரு முறை அவளை வசை பாடிவிட்டு சாப்பிட சென்றார் அவர் .


அவர்கள் ஒன்றும் அவ்வளவு வசதி படைத்தவர்கள் என்று கூற இயலாது . கண்மணியின் தந்தை , அவள் பிறந்த மூன்று வருடங்களில் இறந்து விட , கண்மணியின் தாய் தான் அவளை தாயாகவும் தந்தையாகவும் இருந்து பார்த்துக் கொள்கிறார் . அவருக்கு கண்மணி ஒரே மகள் . ஒரே மகள் என்பதற்காக செல்லம் குடுப்பது எல்லாம் அவர் அகராதியிலேயே இல்லை . அவ்வளவு கண்டிப்பானவர் . எவ்வளவு கண்டிப்பானவரோ அவ்வளவு பாசமும் உடையவர் . எப்போதும் கண்மணியை அவர் கண்ணிற்குள் வைத்து பார்த்துக்கொள்வார் . அப்படி பார்த்துக்கொள்வதில் தவறில்லை , ஆனால் அவர் கண்மணியை சிறு குழந்தையெனவே வளர்த்து விட்டார் . எப்போதும் சிறு குழந்தை போல் தான் இருப்பாள் . வெகுளித்தனம் அதிகம் . இதனால் அவள் சந்திக்க போகும் ப்ரச்சனைகள் என்னென்ன . பார்க்கலாம்........


அவளின் தாய் சாப்பிட்டு விட்ஞு சென்றதும் ,  கண்மணி வெளியே ஓடிவிட்டாள் , விளையாடுவதற்காக .


" ஏன் அக்கா லேட்டு " ஒரு சிறுவன் .


" அந்த அம்மா தான்டா . எப்பவும் போல திட்டிட்டே இருந்தாங்களா . லேட் ஆகிருச்சு . " கண்மணி .


" சரிக்கா விடு . நம்ம போய் விளையாடுலாம் . " என்று கூறி அவளை அழைத்து சென்றான் அவன் .


சிறுவர்களும் இவளும் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாடி கொண்டிருந்தனர் . முதலில் கண்மணி தன் கண்களை கட்டிக்கொண்டாள் .  மற்றவர்கள் அங்கும் இங்கும் கை தட்டி அவளை திசை திருப்பி விட்டனர் . அவளும் வேறு திசையில் சென்றாள் . எதையும் மோசிக்காமல் கை தட்டல் வந்த திசையில் அவள் நேராக செல்ல , யாரோ ஒருவர் மீது மோதி அவன் மேலையே விழுந்தாள் கண்மணி . அவன் கீழையும் , இவள் மேலையும் விழுந்திருந்தனர் .


கண்மணி அவள் கண்களில் இருந்த கட்டை அவிழ்த்தாள் . அவள் எதிரே ஆறடிக்கும் சற்றே குறைவாக ஒருவன் . மீசையில்லாமல் , மொழுமொழுவென மெழுகு சிலை போல் இருந்தான் . வெள்ளையாக தான் இருந்தான் . அதை பார்த்தவளுக்கு மெலிதாக பயம் எட்டி பார்த்தது . சட்டென எழுந்து கொண்டாள் . அதை பார்த்து சிரித்து கொண்டு அவனும் எழுந்து நின்றான் .


" மன்னிச்சுடுங்க . தெரியாம வந்து மோதிட்டேன் . "  என்றாள் குனிந்து கொண்டே .

" இட்ஸ் ஓகே . பரவால்ல , இதுக்கு எதுக்கு மன்னிப்பெல்லாம் . நானும் தப்பு பன்னிருக்கேன்ல . டோன்ட் வர்ரி . அன்ட் டேக் இட் ஈசி மா . " என்றான் சிரித்துக் கொண்டே .


" ம்ம்ம் . நான் போறேன் . " என்றவள் சிறியவர்களுடன் சென்று விட்டாள் .


அவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் . அவள் போகும் போது திரும்பி பார்த்து ஒரு முறை சிரித்து விட்டு சென்றாள் . அதை பார்த்தவனுக்கு உடலில் ஏதோ கரன்ட் போவது போல் இருந்தது . சிரித்துக் கொண்டான் . அவள் கண்ணாமூச்சி விளையாடும் போதே வந்துவிட்டான் . அவள் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டே நடந்து வந்தவன் , அவள் , இவன் மீது மோதியதும் தன்னிலை இழந்து கீழே சரிந்தான் . அதுவும் அவள் கண்களில் தன்னை முழுவதுமாக இழந்துவிட்டான் . பயத்தில் அவள் கண்கள் சிமிட்டும் அழகை ரசித்துக் கொண்டிருந்தவன் , அவள் எழுந்ததும் தான் தன்னிலை பெற்றான் .



இதையெல்லாம் நினைத்துக் கொண்டே தனது வண்டியை எடுத்தவன் , அவனது வீட்டிற்கு சென்றான் .


அவன் வெளி நாட்டில் படித்து விட்டு இப்போது தான் ஊருக்கு திரும்புகிறான் . அந்த ஊர் தலைவரின் மகன் . எல்லையற்ற சொத்துக்களுக்கு சொந்தமானவன் .


தன்னவளை பற்றி யோசித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் . அவன் நுழையும் போதே அவன் தாய் வந்து " நில்லுப்பா . ஆரத்தி சுத்தனும்ல . " என்றார் .
" என்னம்மா இது . திஸ் இஸ் டூ மச் பாத்துக்கோங்க . " என்றான் அவன் .
" என்ன டா ஆதி . " அவனின் தாய் கமலம் . " சரி சுத்துங்க . " என்றவன் , அலனின் ட்ரேட் மார்க் புண்ணகையை சிந்தினான் .


சுற்றி முடித்ததும் " உள்ள வா டா . " என்று கூறி அவனை அழைத்துச் சென்றார் அவன் தாய் . " வாப்பா . என்ன படிப்பெல்லாம் முடிஞ்சுது . அப்றம் என்ன பண்ணலாம்னு ஐடியா . " என்று கேட்டவாறு வந்தார் அவனின் தந்தை விஷ்வநாதன் .
" இனி என்னப்பா . நம்ம சொத்த பாத்துக்கலாம்னு இருக்கேன் . " ஆதி .


" என்னங்க . வந்த ஒடனே படிப்ப பத்தி கேக்குறிங்க . " கமலம் .


" சரிப்பா . நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு வா . " என்று அவனை அனுப்பி வைத்தார் அவர் தாய் .


அவனும் அவளின் நினைவுகளிலே குளிக்க சென்றான் அவன் .



அந்த ஊர் தலைவரின் மகன் தான் ஆதி எனும் ஆதித்ய வர்மா . நல்லவன் , அன்பானவன் . தனக்கு நெருக்கமானவர்கள் என்று நினைப்பவர்களை எப்போதும் தன் நெஞ்சில் வைத்திருப்பவன் .  தாய் தந்தையை தெய்வமென நினைப்பவன் . அவனுக்கு ஒரு செல்ல தங்கை ஈஷ்வரி . எப்போதும் இவர்களுக்குள் ஒரு ப்ரலயமே வெடிக்கும் . ஆனால் இருதியில் விட்டுக் கொடுப்பது இவனின் முறை தான் .


குளித்து விட்டு சாப்பிட வந்தான் ஆதி . " அண்ணா . " என்று அழைத்துக் கொண்டே வந்து அனைத்துக் கொண்டாள் .

அனைவரும் பேசியபடியே சாப்பிட்டு முடித்தனர் .

★★★★★★★★★★


parppom . ini enna nadakkum endru .


© Ashwini