...

4 views

கவிதை சொல்றேன் வாடி என் கண்ணு...
FB கெட்டு போச்சு மகராசி
சும்மா நச்சுனு இசுக்குது முவராசி
பொண்ணு ஏ பொண்ணு
கவிதை சொல்றேன் வாடி என் கண்ணு
உன்னை இழுத்துகின்னு போறேன் Writco - க்கு
இல்ல கொத்திகினு போவான் INSTAVU - க்கு

வண்ணம் மறையாத வானவில்
வளைந்த உன் நெற்றி

வலைவிரித்தும் சிக்காத மீன்கள்
வசீகரிக்கும் உன் இரு கண்கள்

நெருப்பில் கொளுத்தாத நெய்விளக்கு
கூறிய உன் மூக்கு

அளந்து பார்க்காத அற்புதம்
நெளிந்து நெடியா உன் செவி

அணில் கொறிக்காத ஆரஞ்சு பழம்
தேன் சுரக்கும் உன் உதடு

பறிக்க முடியாத வைரம்
பளபளக்கும் உன் பற்கள்

பாடல் பல்லவியில் மீட்டதா கீதம்
மௌனம் காக்கும் உன் பேச்சு

தீண்ட முடியாத தென்றல் காற்று
திகட்டாத உன் பெருமூச்சு

இருள் கலையாத இயற்கையருவி
கருமேக உன் கூந்தல்

நீந்த முடியாத ஏரிக்கரை
நீண்ட உன் கைகள்

வீணை மீட்டதா புதிய ராகம்
உன் அழகிய விரல்கள்

அணியமுடியாத அணிகலன்கள்
தங்கத்தாலான உன் தேகம்

கரைத் தொட முடியாத கடல்
பளிங்கு கண்ணாடி உன் உடல்

மரங்கள் விளையாத மலைச்சோலை
உன் மாராப்பு தாங்கிய மறைவிடம்

எட்டாவது எண்ணின் எழுத்து வடிவில்
இறுகிய பாகம் உன் எடுப்பான இடுப்பு

வேட்டையில் மாட்டாத மான்கள்
துள்ளி விளையாடும் உன் பாதங்கள்

© ஆறாம் விரல் ​✍🏾


#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamil #tamilquotes #quotes #Writcoquotes