...

0 views

ஓநாய் ஆட்டுக்குட்டி புலி
கர்ணா தனிமையில் படகின் முன்னாடி பகுதியில் கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் அந்தப் பகுதியில் பெரிய டான் போன்று சுற்றி வந்து கொண்டு இருந்தான், அந்தக் காலகட்டம் பெரிய வியாபாரம் எல்லாம் இல்லை கடலில் சென்றால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்குமா இந்த அரசாங்கம் உதவி செய்யுமா எனத் தெரியாத அந்த மக்கள் பகுதியில் இருந்தனர் . 

அந்த மக்கள் பொறுத்த வரை கர்ணன் எப்பொழுதும் அவர்களுக்காக வாழும் ஒருவன் தான் 

ஒரு நாள் அந்த மீனவ கிராமம் அந்தப் பகுதியில் வரப் போகும் பெரிய தொழிற்சாலை பணிகள் தொடங்க அந்த மக்கள் எல்லோரையும் வெளியேற்ற மும்பை அரசாங்கம் முடிவு செய்தது அவர்களுக்குப் பெரிய பெரிய பண முதலைகள் தான் முக்கியம் போல இருக்க அப்போது தான் கர்ணன் முன்னே வந்தான் அவன் தலைமையில் ஒரு கூட்டம் உருவாக அந்த மக்களுக்காக அவன் முன்னே நின்று போராடினான் அவர்கள் கூட்டம் கண்ட அரசாங்கம் அவகளை எதும் செய்ய முடியாத நிலையில் இருக்க இந்தியாவில் பல மாநிலங்கள் பல தொழிற்சாலை உள்ளே வரக் கூடாது எனப் பல போராட்டம் தொடங்க ஆரமித்த காலம் என்பதால் அப்பொழுது பெரிதாகத் தொழில்நுட்பம் இங்கே இல்லாமல் இருந்ததால் பெரிதாக ஒன்றாகக் கூட முடியாமல் இருந்தது ஆனாலும் அந்தக் காலாத்தில் இருந்த மக்கள் எல்லோரும் போராடும் குணம் கொண்டு இருந்ததால் எல்லோரும் ஒன்றாகக் கர்ணன் பின் சேர்ந்தனர் கர்ணன் ஒண்ணும் சாதாரண ஆள் இல்லை அந்த மக்கள் நடுவில் பெரிய பட்ட படிப்பு படித்து விட்டு அந்தக் காலத்தில் சரியான வேலை இல்லாமல் பல இன்னல்கள் அவன் சந்தித்து இருக்க அவனைக் கோவம் கொண்ட இளைஞன் ஆக மாற்றியது ( THE ANGRY YOUNG MAN )   அவனின் குணம் கண்டு அந்த மக்கள் எல்லோரும் அவனைத் தலைவன்போல நடத்த தொடங்கினார் பல ஆண்டுகள் ஓடி விட்டது 

இன்று கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டே அவன் மனதில் தான் எதும் மக்களுக்குத் தெரியாயமல் தவறு செய்கிறோம் என மனதில் ஒரு பக்கதில் குற்ற உணர்ச்சி இருக்க ஆனாலும் அவனின் மனதில் இதன் மூலம் வரும் பணம் தனக்கு பெரிய மரியாதை மற்றும் தன் மக்களுக்காகப் பிற்காலத்தில் நல்லது செய்ய முடியும் என நினைத்தான் 

கர்ணன் கர்ணன் சுற்றி இருக்கும் அனைவரும் இவனைப் போலத் தான் நினைத்துக் கொண்டு இருக்க அங்கே ஒருதன் உயர் ரக ஆடை அணிந்து கண்களில் கண்ணாடியெனப் பெரிதாய் பந்தா இல்லாமல் அவன் முன் வந்து நின்றான் 

கர்ணன் சுற்றி இருந்த எல்லோரும் அவனைப் பார்த்து வணக்கம் வைக்கக் கர்ணன் மட்டும் என்ன எனக் கேட்டான். 

உன்னோட தனியா பேசணும் எனக் கூற சரியெனக் கூறி தன்னோட கூட்டத்தைப் பார்த்துக் கண் காட்ட அனைவரும் சென்றனர் 

கர்ணன் அவனைப் பார்த்து வாங்க ஜான் நாம தான் எல்லாமே பேசி விட்டோம் இப்போ என்ன விஷயம் எனக் கேட்டான் 

ஜான் கர்ணன் முகத்தைப் பார்த்துக் கர்ணா உனக்கு நான் தனியா ஒரு டீல் தாரேன் அதை எனக்குத் தனியா முடிச்சு கொடுத்தா மட்டும் போதும் எனப் பொடி வைத்துப் பேசினான் 

கர்ணன் என்ன ஜான் ஏதோ பொடி வச்சு பேசுற என்ன எனத் தெளிவாகச் சொல்லு ஜானெனக் கேட்க 

ஜான் அது ஒண்ணும் கர்ணா நாம சரக்கை இங்க தான் இறக்க போறோமா ஆனா எனக்கு அதுல கொஞ்ச பிரச்சனை இருக்கு எனக் கூறினனான் 

கர்ணன் அதற்க்கு இப்போ என்ன பண்ணலாம் சரக்கை இங்க இறக்காம எங்க கொண்டு போய் இருக்க 

இந்தத் துறைமுகம் போலீஸ் எல்லோரும் பாதுகாப்போட இருக்கிற இடம் சரக்குக் கப்பல் கரையிலிருந்து கடல் லக்கொஞ்ச தள்ளித் தான் இருக்கும் நாம தான் சரக்கைச் சின்னப் படகு வச்சு துறைமுகம் அடுத்து இருக்கிற ஆள் இல்லாத தீவு மாதிரி இருக்கிற இடத்துல தான் இறக்கணும் எனக் கூறினான் அதைக் கேட்ட கர்ணன் என்ன சொல்ற அந்த இடம் கஸ்டம்ஸ் இடம் அங்க போனாலே எல்லோரும் குருவி மாதிரி சுற்றுவாங்க எனக் கூறினான் 

ஜான் அதைப் பற்றி நீ கவலை படாத அந்த இடம் கீழ இருக்கிற பைப் லைன் நேத்து ராத்திரி ஓடஞ்சு போச்சு இதுக்கு மேல அந்த இடம் பாதுகாப்பு இல்லையெனக் கஸ்டம்ஸ் முடிவு பன்னிட்டாங்க 

கர்ணன் சந்தேகமா அதை நீங்கத் தானே செஞ்சது எனக் கேட்க ஜான் அதற்க்கு சிரித்து கொண்டே எப்படி கர்ணா இவ்ளோ ஷார்ப் ஆக இருக்க எனக் கேட்டுக் கொண்டே பலமாகச் சிரித்தான் 

கர்ணன் சிரித்தது பொதும் ஜான் அங்க நாங்க என்ன செய்யணும் எனக் கேட்க அந்த இடம் இப்போ நம்ம கட்டுபாடு மட்டும் இல்லை அதை நாங்களே விலைக்கு வாங்கிட்டோம் அது தனியார் ராணுவ இடம் மாதிரி இருக்கும் உங்க மக்களுக்குச் சொல்லிடு யாரும் அந்தப் பக்கம் வர வேண்டாமென அதுக்கு அப்பறம் உங்க பசங்களை வச்சு நீ இதைச் செய்ய வேணாம் மத்த மாநிலத்தில இருந்து ஆட்கள் வருவாங்க அவங்களை உன்னோட ஆட்கள் வச்சு நீ தான் கண்காணிக்கணும் எனக் கூறினான் 

ஜான் இதை எல்லாம் கேட்கும்போது அவனின் மீது ஒரு நல்ல மரியாதை வர ஆனா ஜான் என்னும் ஓநாய் எதற்க்கு இதை எல்லாம் செய்கிறது எனத் தெரியாயமல் இந்தக் கர்ணன் பிரச்சனையில் மாட்டப் போகிறானெனத் தெரியாமல் இந்த ஆடு அந்த ஓநாய் யிடம் மாட்டியது .. 

சரி கர்ணா எல்லாமே நியாபகம் வச்சுக்கோ நாம அடுத்த வாரம் சந்திப்போம் எனக் கூறினான் கர்ணன் சரி ஜானெனக் கூறினான் 

இங்கே இவை எல்லாம் நடந்து கொண்டு இருக்க விக்ரம் அலுவலகத்தில் விக்ரம் அறையில் ஒரு நபர் அமர்ந்து இருந்தார் 

விக்ரம் அவரைப் பார்த்துச் சொல்லு வேலு உனக்கு என்ன கிடைச்சு இருக்கு 

யாரு இங்க என்ன செய்யப் போறாங்க 

அதற்க்கு வேலு இல்லை விக்ரம் சார் புதுசா ஜானென ஒரு ஆங்கிலோஇந்தியன் நம்ம ஊருக்கு வந்து இருக்கான் அவனைப் பற்றி விசாரிக்க ஆள் அனுப்பி இருக்கேன் நமக்குத் தெரிஞ்ச வட்டம் வரையில அவன் அமெரிக்கா , புளோரிடா மாகாணம் சேர்ந்தவன் எனத் தெரிய வந்து இருக்கு அவன் வந்தது மட்டும் இல்லாம யாரும் போகாத இடம் துறைமுகம் பக்கம் மீனவ மக்கள் இருக்கிற கிராமம் பக்கம் போனதா தகவல் மட்டும் தான் கிடைச்சுது அங்க கிராமம் மக்கள் தவிர யாரும் புதுசா போக முடியாது ஆனா இந்த ஜான் எப்படி போனானெனத் தெரியவில்லையெனக் கூறினான் 

விக்ரம் மனதில் பல குழப்பம் இருக்க அவருக்கு ரொம்ப நெருக்கமான ராணுவ அதிகாரி ஷர்மா க்கு கால் செய்து அவரிடம் அவர் அலுவலகம்வரை வர முடியுமா எனக் கேட்க விக்ரம் கேட்டவுடன் அரை மணி நேரத்தில் விக்ரம் கண் முன் அமர்ந்து இருந்தார் 

ஷர்மா அறிவார் ஏதாவது பெரிய பிரச்சனை வரப் போகிறது எனத் தெரிய வந்தால் மட்டுமே விக்ரம் அழைப்பாரென யாருக்கும் தெரியாத வகையில் சாதாரண ஆள்போல ஷர்மா அவர் முன் அமர்ந்து இருக்க விக்ரம் பேச ஆரமித்தார் 

ஷர்மா புதுசா  ஜானென ஒருத்தன் மும்பை உள்ள வந்து இருக்கான் அவன் அமெரிக்கா சேர்ந்தவன் அவனைப் பார்க்கும் போதே கொஞ்ச சந்தேகமா இருக்கு எனக் கூறினார் 

அதைக் கேட்ட ஷர்மா கொஞ்ச தெளிவா சொல்லுங்க விக்ரம் அவன் யாரு எனக் கேட்க எனக்குத் தெரியாது ஆட்கள் அனுப்பி இருக்கேன் எனக் கூறினார் ஆனால் அவன் புளோரிடா சேர்ந்தவன் மட்டும் தெரியும் அது போக அவன் ஆங்கிலோஇந்தியன் எனக் கூறினான் இதை எல்லாம் கேட்கும் பொழுதில் அவன் புளோரிடா எனக் கூறியது மட்டுமே ஷர்மா மனதில் ஒரு சில குழப்பத்தைத் தூண்டியது அது மட்டுமில்லாமல் அவன் முதலில் துறைமுக பக்கம் சென்றது தான் விக்ரம் வேலு இருவருக்கும் சந்தேகம் அதிகமாகக் கிளப்ப அதை ஷர்மா விடம் கூறினார்கள் 

இதற்க்கு என்ன செய்யப் போகிறோம் என யோசிக்க அந்த நேரம் விக்ரம் மனதில் ஒரு யோசனை வரத் தான் மகன் ராஜா ஆதித்தன் க்கு அழைத்து இங்கே வரக் கூறினார் அதைக் கேட்ட வுடன் விக்ரம் அறைக்கு வரும் சுரங்க பாதை வழியாக வந்தான் 

இங்கே நடக்கும் குழப்பம்பற்றி அறிந்த ராஜா தான் இந்தக் கம்பெனியில் வேலைக்குச் சேர போவதாகவும் இங்கே இருந்து தன் பணிகள் தொடங்க போவதாகவும் அதற்க்கு எல்லோரும் எதாவது ஒருவகையில் உதவ  வேண்டும் என ராஜா கூறினான் . 

ராஜா சட்டென வேலுவை திரும்பிப் பார்த்து ஜான் எங்க எல்லாம் போறானென ஒரு ஆள் விட்டுத் தொடரு அது மட்டும் இல்லை அவனோட நடவடிக்கை எல்லாமே கொஞ்ச வித்தியாசமா இருக்கு அதுனால கொஞ்ச ஜாக்கிரதையா இருக்கணும் எனக் கூறினான் 

அதற்க்கு வேலு சாரி பாஸ் எனக் கூறினான் 

வேலு நீ கிளம்பலாமெனக் கூறிய ராஜா அவன் போன அப்பறம் ஷர்மா விக்ரம் இருவரையும் பார்த்து எனக்கு என்னவோ இந்தியா குள்ள ட்ரக்ஸ் கொண்டு வரத் தான் இந்த வழி எல்லாமே இருக்கும் எனக் கூறினான் 

ராஜா கூறுவதை கேட்ட ஷர்மா என்ன சொல்றீங்க ராஜா எப்படியொரு கூட்டம் இதைப் பண்ண முடிவு செஞ்சி இருக்காங்க எனச் சொல்றீங்க .. 

விக்ரம் கூட இதைப் பற்றித் தான் ராஜாவிடம் கேட்கத் தொடங்கினார் 

ராஜா இருவரையும் அமைதியாகப் பார்த்து விட்டு அவன் தான் பையில் எப்பொழுது வைத்து இருக்கும் ஒரு குட்டி டைரி எடுத்து அதில் குறிப்பிட்டு இருந்த நாட்கள் எல்லதையும் அங்கே இருக்கும் நாட்காட்டி யில் வட்டம் போட்டுக் கொண்டு இருந்தான் , அதைப் பார்த்த விக்ரம் இது என்ன எனக் கேட்கச் சொல்றேன் அப்பா எனக் கூறிவிட்டு தான் கையில் இருக்கும் குட்டி டைரி யில் இருக்கும் அவன் கடந்த மூன்று நாட்களாகச் சேகரித்த தகவல்பற்றிய விவரம் சொல்லப் போறேன் எனக் கூறினான் 

அது என்ன தகவல் அடுத்த அத்தியாயத்தில் காண்போம் .


© அருள்மொழி வேந்தன்