...

0 views

இது போர்க்களம்
 

எல்லோரும் திட்டம் போடத்து போல நடந்து கொண்டு இருக்க அங்கே ஜான் வேற ஒரு திட்டம் செயல் படுத்த ஆரமித்தான் , இங்கே கர்ணன் பணையம் வைத்து விட்டுப் பக்கத்து தீவு சேர்ந்த ஆட்கள்மூலம் 3 நாள் அப்பறம் வர வேண்டிய கப்பலை அவர்கள் எல்லோரும் வேறொரு சிறிய கப்பலில் சென்று மடக்கி விட்டனர் ஜான் வரப் போராதை தெரிந்த அந்தக் கப்பல் மாலுமி ஜான் வருகைக்காகக் காத்து கொண்டு இருந்தான் ,

பல சாக்கு மூட்டைகள் இந்தப் படகிலிருந்து அந்தக் கப்பலில் கை மாற்றப் பட்டது , பிறகு ஜான் போட்டு வைத்த திட்டம்போல வெள்ளை நிற பொடி மற்றும் மாத்திரை கள் நிறைந்த பெரிய பெரிய பெட்டிகள் இருப்பதை உறுதி படுத்தி கொண்ட ஜான் அங்கே இருந்து கிளம்பி சென்றான் 

இரண்டு நாட்கள் முடிவு அடைந்த பின் திட்டம் போட்டது போலக் கர்ணன் சிறைசாலை அழைத்துச் செல்லப் பட்டான் ஆனால் மக்கள் யாருக்கும் தெரியாத வண்ணம் செய்தார்கள் , அங்கே கர்ணன் இருக்க அவனைப் பார்க்க முதலில் தீபா சென்றால் தீபா வைப்பார்த்த கர்ணன் என்ன மேடம் எதுக்கு என்னை இப்போ கைது செஞ்சி இருக்கீங்க , கண்டிப்பா பழைய கேஸ் எனப் பொய் மட்டும் சொல்லாதீங்க கண்டிப்பா இதுக்கு பின்னாடி ஏதோ இருக்கு என்ன சரியா மேடம் எனக் கேட்டான் 

இவர்கள் பேசிகொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருந்த ராஜா சிறிது நேரம் கழித்து அந்த அறையில் நுழைந்தான் 

ராஜா வருவதை பார்த்த கர்ணன் , 

ராஜா வை எங்கயோ பார்த்த மாதிரி இருக்க யோசனையாக இருந்தான் , சிறிது நேரம் யோசித்த பின் ராஜா முகத்தைப் பார்த்து நீ தானே அன்னைக்கு என்னைப் பார்க்க வந்த அப்போ என்னவோ நீ வேலை தேடிட்டு இருக்க எனச் சொன்ன 

அன்று இரவு நேரம் கர்ணன் கடற்கரை பகுதியில் நடந்து கொண்டு இருந்தான் அப்பொழுது இருவர் அடித்துக் கொண்டு இருப்பது தெரிந்தது அங்கே ராஜா இருக்க அவனை இருவர் அடித்துக் கொண்டு இருந்தனர் அதைக் கண்ட கர்ணன் அங்கே ஓடிச் சென்று என்ன என்று பார்க்க அங்கே சண்டை போட்டுக் கொண்டு இருந்த எல்லோரையும் விளக்கி விட்டு ராஜா அருகில் செல்ல அப்பொழுது தான் தெரிந்தது அங்கே ராஜாவை அடித்த எல்லோரும் வழிப்பறி கும்பல் என்பதை கண்ட கர்ணன் அனைவரையும் தன் ஆட்களுக்குக் கண் அசைவில் கட்டளை யிட்டான் கொண்டு போகச் சொல்லி . 

அப்பொழுது தான் ராஜா அருகே வந்த கர்ணன் என்ன எனக் கேட்க நடந்து வரும்பொழுது இப்படி ஆனது எனக் கூறினான் தான் வேலை இல்லாமல் இருப்பதாகவும் வேலை இருந்தால் நன்றாக இருக்கும என்றும் கூறினான் அப்போது கர்ணன் அவன் அருகில் இருந்த அடி ஆள் இடம் ராஜாவைத் துறைமுகம் அழைத்துச் செல்லக் கட்டளை யிட்டான் வேலை கேட்டு அங்கே ஒரு நாள் இருந்து அங்கே என்ன நடக்கிறது என எல்லாவற்றையும் கவனித்து கொண்டு இருந்தான் 

அங்கே ராஜா வந்ததை பார்த்துக் கொண்டு இருந்த கர்ணன் இடம் இருவரும் பேச ஆரமித்தனர் இங்க பாரு கர்ணா எனக்கு ரெண்டு விஷயம் தெரியணும் ஒண்ணு ஜான் எங்க ரெண்டாவது அந்தத் தீவு ல இருக்கிற ஆள் யாரு 

அப்பறம் எதுக்கு அங்க அத்தனை லாரி வருது எனக் கேட்க 

'

ஜான் பற்றிக் கேட்ட வுடன் கர்ணன் ஒரு நிமிடம் திகைத்துப் போனான் 

இங்கே கர்ணன் காவலில் இருக்க அதைத் தெரிந்து கொண்ட ஜான் எதரக்காக கஅவள் எனத் தனது ஆட்கள் விட்டு விசாரிக்கக் கூறினான் அதற்க்கு அவர்கள் பழைய கேஸ் எனவும் விசாரணை மட்டும் தான் எனவும் கூறினார்கள் என அவன் கூறினான் 

அந்தக் கிராம மக்கள் எல்லோரும் ஒன்றாக அந்த camp யில்  கலந்து கொண்டனர் அங்கே இருக்கும் எல்லோரிடமும் பரிசகோதனை நடந்து கொண்டு இருந்தது 

இங்கே ஜான் தீட்டி வைத்த திட்டம் ஒவ்வொன்றாய் செயல் படுத்த தொடங்கினார் 

கர்ணன் ஒரு பக்கம் சிறையில் இருக்க இது தான் சமயம் என்பதை உணர்ந்த ஜான் அவன் கிராம மக்கள் எல்லோரையும் தன் வசம் வைக்க நினைத்து அவன் ஆட்கள் எல்லோரும் உள்ளே அனுப்ப முயன்றான் அவர்கள் எல்லோரும் உள்ளே வருவதை கண்ட விக்ரம் குழு என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்க , ஷர்மா அனுப்பிய ஆட்கள் அங்கே இருக்க சற்று நிம்மதி அடைந்தனர் . உள்ளே வந்த ஜான் ஆட்கள் எல்லோரும் கையில் ஆயுதம் ஏந்தி இருக்க மக்கள் எல்லோரும் அந்த camp நடக்கும் இடத்தில் அமைதியாக இருக்க அங்கே இருக்கும் எல்லோரும் சாதாரண மக்கள் என நினைத்து இருந்தனர் 

ஷர்மா அனுப்பிய ஆட்கள் எல்லோரும் ஆயுதம் தயார் நிலையில் இருக்க 

அங்கே காவல் நிலையம் அமைதியாக இருக்க ராஜா பேச ஆரமித்தான் உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் கர்ணா நீ இப்போ கூட்டு வச்சு இருக்கிற ஆள் ஒரு கடத்தல் கூட்டதை சேர்ந்தவன் அவன் உனக்கு என்ன வேலை கொடுத்தானெனக் கேட்டான் 

ராஜன் பேசிய பேச்சில் இருந்த உண்மை மற்றும் உறுதி புரிந்து கொண்ட கர்ணன் ஏதோ சரக்கு வருது சொன்னான் ஆனா எனக்கு அதுல சந்தேகம் தானெனச் சொன்னான் சரி கர்ணா மூணு நாள் முன்னாடி உன்னோட ஆட்கள் ஜான் கூட எதுக்கு கடல் ல 100 நாட்டிக்கள் போனாங்க அங்க இருந்து வரக் கப்பல் ல என்ன இருக்கு எனக் கேட்க 

அதைக் கேட்ட கர்ணா அதிர்ந்தான் என்ன சொல்லுறீங்க சார் எங்க பசங்க யாரும் போகவே இல்லையேயெனக் கூற தீபா மற்றும் ராஜன் மனதில் ஏதோ குழப்பம் நிலவியது 

ஷர்மா அனுப்பிய ஆள் ராஜன் இருக்கும் காவல் நிலையம் வந்து அங்கே நடந்ததை பற்றிக் கூறினான் அதைக் கேட்ட ராஜன் உடனே கர்ணன் அழைத்தது தீபா உடன் அங்கே சென்றான் 

அவர்கள் வரும் முன்னே சில அசம்பாவிதம் நடந்து இருந்தது மக்கள் எல்லோரும் ஒரு இடத்தில் கைதிபோல இருந்தனர் அங்கே camp நடக்கும் இடம் ரத்த காடாக இருக்க அதைக் கண்டு ராஜன் திடுக்கிட்டுப் போனான் 

தீபா அங்கே இருந்த அவர்கள் சக நண்பர்கள் மாய்ந்து இருப்பதை கண்டு கண்கள் கலங்கி நின்று கொண்டு இருந்தால் 

ஜான் செய்த திட்டம் 

அங்கே இருந்த மக்களைக் காப்பாற்ற நினைத்து விக்ரம் அமைப்பைச் சேர்ந்த எல்லோரும் அவர்கள் வைத்து இருந்த ஆயுதம் எடுத்து ஜான் ஆட்களைப் பார்த்துச் சுட அரமித்தனர் ஆனால் தாமதம் ஆனதால் அவர்கள் வைத்து இருந்த வேடு குண்டுகள் அவர்கள்மீது வீச எல்லோரும் அங்கே மடிந்து விழுந்தனர் இதை எல்லாம் கண்ட ராஜா தீபா இருவருக்கும் கண்கள் சிவக்க அந்த நேரம் அங்கே வந்த ஷர்மா வைப்பார்த்து என்ன நடந்தது எனக் கேட்க அவர் எல்லாவற்றையும் கூற கண்கள் முழுதும் ரத்த சிவப்பாக மாற ஷர்மா உடன் வந்தவர்கள் கையில் இருந்த துப்பாக்கியை வாங்கிய ராஜா முன்னேற ஆரமித்தான் அவனைத் தொடர்ந்து தீபாவும் செல்லக் கர்ணன் தன்னோட மக்களுக்காக இறந்து கிடந்த அவர்களைப் பார்த்துத் திடுக்கிட்டு நின்று கொண்டு இருந்தான் நம்ப வைத்துக் கழுத்து அறுக்கப் பட்டதாக நினைத்த கர்ணன் தான் முழு கோவம் வெளி வர  ஷர்மா அருகில் வந்தவன் எனக்குத் துப்பாக்கி வேணாம் எனக்கு நங்கூரம் வேண்டும் எனக் கேட்டான் 

ஷர்மா அதைக் கேட்டு என்ன சொல்லுற எனக் கேட்க எனக்கு அது மட்டும் வேண்டும் என்னால இப்போ கடற்கரை பக்கம் போக முடியாது 

உங்களால எனக்கு உதவ முடியுமா நான் என்னோடய உயிர் கொடுத்து நான் இங்க போராடுவேன் என்னோட மக்களுக்காக இத்தனை பேர் இறந்து போய் இருக்காங்க சாரெனக் கண்கள் கலங்க கூறினான் 

போர்க்களம் நடுவே 

அங்கே ராஜன் இருக்கும் கோவத்தில் உள்ளே மறைந்து மறைந்து சென்றான் அவன் கண்ணில் பட்ட எல்லோரும் இறந்து போனார்கள் சத்தம் வராமல் செய்தான் அவன் செயல் கண்ட தீபா அதிர்ந்து போனால் இதுவரை செவி வழி யேக்கேட்ட எல்லாம் கண் முன்னே நடக்க அவளும் தன்னோட பங்கு க்கு பலரை கொன்று குவித்தால் 

ஜான் அங்கே ஒரு பகுதியில் மறைந்து இருந்தான் அவன் அடுத்து அடுத்து நடக்க வேண்டியதை திட்டம் தீட்டத் தொடங்கினான் அவன் முதல் வேலை இந்த மக்களைத் தான் அடிமையாக வைக்க அவன் தீட்டிய திட்டம் நடந்து விட்டது இங்கே ஒருவர் ஒருவராக இறந்து கொண்டு இருப்பது தெரியாமல் அங்கே இருந்த ஜான் . 

கடற்கரை அருகில் ஷர்மா துணையுடன் சென்ற கர்ணன் அங்கே இருந்த கப்பல்மீது ஏறி மறைந்து நின்றான் அங்கே இருந்து பார்க்கும்பொழுது ஜான் கூட்டி வந்த ஆட்கள் படகு எடுத்துக் கொண்டு கடல் உள்ளே சென்றனர் 

ஷர்மா இருக்கும் இடம் சென்றவன் அங்கே தான் கண்டதை கூற தான் ஆட்களிடம் கூறி கடல் நடுவே ரோந்து கப்பல் செல்ல உத்தரவு இட்டார் ஷர்மா உத்தரவு கிடைத்த உடன் கடற்கரையிலிருந்து எதிர் திசையில் சென்று மீண்டும் அந்தக் கப்பல் இருக்கும்  இடம் நோக்கிச் செல்லும் வியூகம் முடிவு செய்து சென்றனர் இதைப் பற்றித் தெரியாத ஜான் உள்ளே இருந்து கொண்டு சந்தோஷத்தில் மிதந்து கொண்டு இருந்தான் 

கர்ணன் கையில் கிடைத்த பொருள் எல்லாம் எடுத்துக் கொண்டு தன்னோட மக்கள் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான் . 

அங்கே மக்கள் எல்லோரும் கைக்கால்கள் கட்ட பட்ட நிலமையில் இருந்தனர் அதைக் கண்டு கண்கள் கலங்கி நின்றான் 

அங்கே யாரோ வருவது தெரிய அமைதியாக ஒரு இடத்தில் ஒளிந்து கொண்டான் , 

ஜான் கூட்டாளி யாக இருந்தவன் அங்கே கையில் துப்பாக்கி கொண்டு வந்து இருந்தான் அதை வைத்து அங்கே இருந்த மக்கள் எல்லோரையும் மிரட்டிக் கொண்டு இருந்தான் 

. அடுத்து என்ன நடக்கும் , 

ஜான் என்ன செய்யக் காத்து கொண்டு இருக்கிறான் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம் 


© அருள்மொழி வேந்தன்