...

5 views

புனிதர் பிலோமினா ...
இந்த கட்டுரை புனித பிலோமினா வீர மங்கை பற்றியும் நான் கண்டு வந்த தேவாலயம் பற்றியதும்.

🐥🐥🐥      🐥🐥🐥🐥🐥    🐥🐥🐥

பிலோமினா (fi lomna) என்றால் ஒளியின் மகள் என பொருள்ப் படும்.

புனிதர் பட்டம் பற்றிய சில குறிப்புகள்:

புனிதர் பட்டம் என்பது ஒரு ஆன்மா உலக வாழ்வில் இருக்கும் போது அவர்கள் புனித தன்மையுடனும் , இறை பற்றுடன் இறை பணிகள் செய்தும் அனேக மக்களின் மனதில் நீங்கா இடம் வகித்தது இறைப்பாதம் அடைவார்கள்.

மக்களின் நம்பிக்கை வழிபாட்டின் மூலமும் அவர்களின் பரிந்துரையின் பேரிலும் புனிதர் பட்டம் வழங்கப்படுகிறது.

மேலும் புனிதர்களின் பேரில் அனேக மக்கள் நம்பிக்கையுடன் இன்றும் வழிபடுகின்றனர் இதன் காரணமாகவே பல புதுமைகள் நடந்தும் வருகிறது புனிதர்களின் அருளால்.

💐💐💐💐💐💐💐🌼🌼🌼💐💐💐💐💐


சரி இனி பிலோமினா அவர்களை பற்றி காண்போம்.


இவர் கிரேக்க நாட்டை சார்ந்த அரச குடும்பத்தில் கி.பி 1500 ஆம் ஆண்டின் கால கட்டத்தில் பிறந்த இளவரசி ஆவார்.

கிரேக்க அரசருக்கு பல ஆண்டுகள் கழிந்தும் , பல தெய்வ வழிபாடுகள் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் ‌இருந்தது .  

பின்னர் கிருஸ்துவை பின் பற்றி வழிபட்டார்  அரச குடும்பத்தினர் இதன் காரணமாகவே பிலோமினா பிறந்தார் என்றும் நம்பினார் கிரேக்க அரசர். 

பிலோமினா வளரும் பருவத்தில் அக்காலத்தின் கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த பேரழகியாகவும் திகழ்ந்தார்.

இதனால் ரோம் நாட்டின் அரசர் பிலோமினாவை திருமணம் முடிக்க எண்ணினார் . ஆனால் பிலோமினா அரசனின் விருப்பத்தை  ஏற்க வில்லை எனவே ரோம் அரசரின் ஆணையின் பேரில் பல இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டு மிக குறைந்த வயதிலேயே இறைப்பாதம் தழுவினார் இவர் . அப்போது பிலோமினாவின் வயது 35 கும் குறைவானதே .

🦚🦚🦚🦚🦚🦚🐥🐥🐥🦚🦚🦚🦚🦚🦚


சரி இனி நான் சென்று கண்டு தரிசித்து வந்த கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள செயிண்ட் பிலோமினா அல்லது ஜோசப் ஆலயம் என்று அழைக்கப்படும் தேவாலயம் பற்றிய விவரங்கள் கூறுகிறேன்.


இந்த தேவாலயமானது ஐரோப்பிய கத்தோலிக்க கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது . இதன் கீழ் தள  அமைப்பு புனித சிலுவையை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டது 

மேலும்....

பலிபீடத்தின் கீழே நிலவறை அமைக்கப்பட்டு இருக்கிறது . இங்கு புனித பிலோமினா மற்றும் புனித இயேசுவின் சிலைகள் கருவறையில் பளிங்கு பீடத்தில் காணலாம் .

புனித பிலோமினாவின் உருவ சிலையானது சயனித்த நிலையில் புது மலரின் பொலிவுடன் காணப்படும்.

நிலவறையின் கருவறைக்கு முன்பக்கம்
ஒரு கிணறு போன்ற இரும்பு வலைகளால் முடப்பட்ட காணிக்கை உண்டியல் இருக்கிறது அதில் நாம் காணிக்கைகள் செலுத்தலாம்.

இங்கு உள்ள சுவர்களில் ஆலையத்திற்காக  நன்கொடை அளிக்கப்பட்டவர்களின் பெயர்கள்  டைல்ஸ் ல்  குறிக்கப்பட்டு சுவர்களில் ஒட்டப்பட்டும்‌  இடம் பெற்றுள்ளது அனைத்தும்  .

நிலவறையின் வலப்புறம் வெளியே செல்வதற்கு நீண்டப் பாதையை கடந்து படிக்கட்டு இருக்கும் இதனை கடந்து வெளியே வந்தால் மாதாவின் கேபி  சிருபம் (சிலை) காணப்படும்.



இவை அனைத்தும் கண்டு மகிழ்ந்தும் மன அமைதியும் பெற்று வந்தேன் இந்த அனுபவத்தினை உங்களுடன் பகிர்வதிலும் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி

மீண்டும் ஒரு கட்டுரை வரைகிறேன்   வேறு சில குறிப்புகளுடன்.




© All Rights Reserved
piyu