...

4 views

❤️தீராத காதல்❤️-3
அவர் சென்றதிலிருந்து அவரின் வரவை எதிர்பார்த்து வாசலையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்.... பொழுதும் ஆகிவிட்டது பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட்டனர்.இரவு முழுவதும் காத்திருந்து அவளை அறியாமல் கண் அயர்ந்துவிட்டாள்.பட்டாசு சத்தங்களுக்கு இடையே கதறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.இனம்புரியா பதற்றத்தோடு வாசலை நோக்கி நடக்கிறாள்!!! அவள் வாசலை நோக்கி செல்ல செல்ல இதய துடிப்பு அதிகரிக்கிறது(மணி சரியாக அதிகாலை 3.00 ). வெளியே சென்று பார்க்கிறாள் ஒரே கும்பலாக நின்று அனைவரும் கதறி அழுதுகொண்டிருந்தனர், இவளுக்கு ஒன்றும் புரியவில்லை சிந்தித்து கொண்டே கூட்டத்தை நோக்கி நடக்கிறாள்.அவள் அங்கு செல்வதற்குள் ஒருவர் ஓடி வந்து கண்ணீரோடு திடீரென நெசவு ஆலை தீப்பிடித்ததால் போராட்டம் நடத்திய தொழிலாளிகள் உள்ளே சிக்கிக் கொண்டார்கள் அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர் என்று கூறினார்.இதை கேட்டு அவள் அங்கேயே மயங்கினாள்.
சிறிது நேரத்தில் அங்கு உள்ளவர்கள் இவளை சுயநினைவுக்கு கொண்டு வந்தனர்.ஆலைக்கு வெளியே தொழிலாளிகளின் நிலையை எண்ணி கதறலுடன் அவர்களின் குடும்பத்தினர் நின்றிருந்தனர்.இவளும் அருகில் இருந்த
STD க்கு சென்று தனக்கு ஒரே உறவான அவளின் தம்பி கண்ணனுக்கு இக்கொடிய செய்தியை கண்ணீர் மல்க கூறினாள்.அவன் இதை கேட்டு மனமுடைந்து போனான்.இருப்பினும் தீயணைப்பு வீரர்கள் கண்டிப்பாக மாமாவை மீட்டு தருவார்கள் என்று ஆறுதல் கூறினான்.அந்த ஆறுதலோடு வெளியில் நின்ற இவளுக்கு தன் கணவனின் உடல் கரிகிபோன சடலமாகவே கிடைத்தது!!!! கதறினாள் ஆதங்கபட்டாள் அழுது புலம்பினாள் ..... விடிந்தத அன்றைய தீபாவளி பலருக்கு துக்கநாள்....
.
.
.
தொடரும்.....✍️