...

3 views

ஏன் என்னை பிரிந்தாய்?
இது ஒரு கதை இல்ல. இன்னும் சொல்ல போனா இது ஒரு கதையான்னு கூட எனக்கு தெரியல. ஆனா என் மனசுல இருக்குற ஒரு வலியை என்னோட எழுத்துக்களால கரைக்கனும் போல இருக்கு. அப்படி என்னை வலின்னு கேட்குறீங்களா? வாங்க சொல்லுறேன்.

பொதுவாகவே எனக்கு செல்ல பிராணிகள்ன்னா ரொம்ப இஷ்ட்டம். ஆனா நாய்களை தவிர வேறு எந்த செல்ல பிராணிகளையும் எனக்கு வளர்க்கவோ பராமரிக்கவோ தெரியாது. அதனால நான் நாய் வளர்க்குறேன். எனக்கு நாய்களை பிடிக்குற மாதிரி, என் அம்மாக்கு கோழிகள் ரொம்ப பிடிக்கும். அதனால எங்க வீட்டுல நிறைய கோழிகள் வளர்க்குறோம். எனக்கு அவ்வளவா கோழி வளர்ப்பில் ஆர்வம் இல்லை தான். ஆனால் என் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால தானோ என்னவோ, அம்மாக்கு பிடிச்ச கோழிகளையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவைகளை பராமரிக்குறது எல்லாமே அம்மா தான் பண்ணுவாங்க.

ஒரு நாள் அம்மா ஒரு பத்து கோழி முட்டையை எடுத்துட்டு கோழி கூடு பக்கமா போனாங்க.

"அம்மா இதெல்லாம் எங்க எடுத்துட்டு போறீங்க?" என்று கேட்டவாறே, நானும் அம்மாவை பின்தொடர்ந்து போனேன். அம்மா சரியா எந்த பதிலும் சொல்லாம,

"நீயும் என் கூட வா" அப்படின்னு சொல்லிட்டு ஒரு சின்ன ப்ளாஸ்டிக் டப்பில் கொஞ்சம் மணல் எடுத்து, அதுல பத்து முட்டையையும் வரிசையை மெல்லமா அடுக்கினாங்க. ஒரு அடை கோழியை தூக்கிட்டு வந்து, முட்டை எதுவும் அசையாத மாதிரி அதுக்கு மேல வச்சாங்க.

அது தான் எங்க வீட்டுக்கு முதல்ல வந்த கோழி. அதுக்கு பெயர் கூட வச்சிருக்கோம். அதுக்கு பெயர் "ஹேனா". அத தான் அந்த முட்டைகள் மேல வச்சோம். ஹேனா கொஞ்சம் குண்டா இருப்பா. அவளோட பல்க் பாடியால தான் அத்தனை முட்டையையும் பாதுகாக்க முடியும்ன்னு அம்மா சொன்னாங்க. ஆமா அம்மா சொன்னதும் சரி தான். எல்லா முட்டையையும் பாதுகாப்பா தனக்கு கீழே வச்சிட்டா. ஒரே ஒரு முட்டை மட்டும் கொஞ்சம் வெளியே தள்ளி இருந்தது. அதையும் தன் கழுத்த வளைச்சி, தன் அலகால இழுத்து தனக்கு கீழே வச்சிட்டா ஹேனா. அத பார்க்கவே எவ்வளவு அழகா இருந்துச்சி தெரியுமா? நிஜம்மா சொல்லுறேன். எனக்கு புல்லரிச்சிடுச்சி. பக்கத்துல நின்ற என் அம்மாவோட கழுத்தை கட்டிகிட்டு அம்மா கிட்ட கேட்டேன்.

"அம்மா ஹேனாவுக்கு அவளோட குழந்தைகள் மேல எவ்ளோ பாசம் பார்த்தீங்களா? நானும் உங்க வயிற்றுல இருக்கும் போது இப்படி தான என்னை கண்ணே மணியேன்னு ஆசையா தடவி பார்ப்பீங்க."

"ஆமா.... ஆமா..... புள்ளைன்னு நினைச்சி எருமை மாட்டை போட்டு பெத்து வளர்த்துருக்கேன்." என்று என் அம்மா செல்லமா என்னை திட்டிட்டு, வேலையை பார்க்க போய்ட்டாங்க. ஆனா நான் எங்கேயும் போகல, ஹேனாவையும் அவ மறைச்சி வைச்சிருந்த முட்டையையும் பார்த்துட்டு கொஞ்ச நேரம் அங்கேயே நின்றேன்.

"இயேசப்பா, எல்லா முட்டையும் நல்ல முட்டையா இருக்கனும். ஒன்னுமே கூமுட்டையா போக கூடாது. இதுல இருந்து வெளியே வரும் கோழி குஞ்சு எல்லாம் பெருசா வளரனும். வளர்ந்து நிறைய முட்டைகளை கொடுக்கனும்." என்று இறைவனிடம் வேண்டுதல் வச்சிட்டு, அப்புறம் நானும் என் வேலையை பார்க்க போய்ட்டேன்.

அன்னைல இருந்து 21 வது நாள் வரை, தினமும் போய் ஹேனாவை பார்ப்பேன். அவ சாப்பிட வெளியே வரும் போதெல்லாம் அவளுக்கு தண்ணியும் சத்தான கோழி தீவனமும் கொண்டு போய் வைப்பேன். அவளும் சமத்தா சாப்ட்டுட்டு, மறுபடியும் போய் முட்டைகள் மேல உட்கார்ந்துடுவா.

நாட்கள்...