எந்தன் உமையாள்
அன்பென்னும் ஒரு சொல்லில் நீ எந்தன் உயிராகி நான் உந்தன் சுவாசம் ஆனேன் !..
உயிரோடு உயிராக நான் உந்தன் உறவாகி உன்னில் ஆனேன் !
பொய்யாக நீ பேசும் சில நிமிடம் அதை நானும் மெய்யாக நினைத்து அதை நானும் ரசிக்கின்றேனே !
சிலை ஒன்று வடிக்கின்றேன் என் மனதில் தோன்றும் முகம் நீதானே !
இந்த ஒரு ஜென்மங்கள் போதாது பல யுகங்கள் கடந்தாலும் நீ எந்தன் துணையாக வர வேண்டுவேன் !..
உயிரோடு உயிராக நான் உந்தன் உறவாகி உன்னில் ஆனேன் !
பொய்யாக நீ பேசும் சில நிமிடம் அதை நானும் மெய்யாக நினைத்து அதை நானும் ரசிக்கின்றேனே !
சிலை ஒன்று வடிக்கின்றேன் என் மனதில் தோன்றும் முகம் நீதானே !
இந்த ஒரு ஜென்மங்கள் போதாது பல யுகங்கள் கடந்தாலும் நீ எந்தன் துணையாக வர வேண்டுவேன் !..