...

4 views

இதயம் தொட்டக் காதல்
வான் முகிலும் மயங்கியது
நிலவினது அழகைக் கண்டு
வளையாத பெண் மனமும்
காற்றில் வளையும் மூங்கிலாய் ஆனதே !!


குழலின் கானமும் தோற்றுத் தான் போனது
அவனது மதிமயக்கும் காந்தக் குரலைக் கேட்கையிலே !!
திக்கற்ற என் வாழ்வில் ஒளியூட்ட வந்தவனே
நின்  மேல்  கொண்ட காதல் என் வாழ்வினை மாற்றுமோ ?


வானத்தின் திருஷ்டிப் பொட்டாய் நீ இருக்க
உனது திருஷ்டிப் பொட்டாய் நானும் நட்சத்திரமாய்
உன்னையே உலா வருகிறேன் !!

உன் வதனம் காணா ஒவ்வொரு நொடியிலும்
அனு அனுவாய் துடிக்கிறேன்
தனிமையில் இனிமை காண்கிறேன் !!!


உன் மீது கொண்ட தீரா மையலும்
எல்லையில்லா பாசமும்
என் இதயத்தை தொட்டுவிட்டது!!
உன்னிடம் கொள்ளைப் போன இதயத்தை மீட்கப் போவது என்றோ?


© Rohini Rajamani