...

2 views

08) வஞ்சம் தீர்க்க வருகிறாள்.
( 08 ) 👻👻👻👻👻👻

மூன்று நாயகர்களும் அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர் . அங்கு நம் நாயகிகள் டைம் மிஷின் செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்க இங்கு இவர்கள் நெகெட்டிவ் எனர்ஜியை எப்படி ஓட்டலாம் என்ற ஆராய்ச்சியின் முதல் படிக்கட்டில் காலை எடுத்து வைத்துள்ளனர் .


" டேய் அந்த நெகெட்டிவ் எனர்ஜி கிட்ட போய் , நீ ஒரு நல்ல நெகெட்டிவ் எனர்ஜியா இருந்தா நிலாவ கொல்லாதன்னு சொல்லிரலாமா . " ஜான் .

" நீ போய் சொன்ன ஓடனே  அதுவும் , ஆமால்ல , நா நல்ல நெகெட்டிவ் எனர்ஜி . அதுனால யாரையும் கொல்ல கூடாதுன்னு போய்ரும் பாரு . லூசு பக்கியே . ஒழுங்கா யோசி டா . " என்று திட்டினான் சூர்யா .

"எனக்கு ஒரு டௌட் . " விஷ்வா .

" என்னது டா . " ஜான் .

" இல்ல . சூர்யா எதுக்கு நிலா மேட்டர்ல இவ்ளோ டீப்பா போறான் . " விஷ்வா .

" யாருக்கு தெரியும் . என்ன செய்ரதா இருந்தாலும் நமக்கு அவன் சொல்லிட்டா செய்ரான் . " ஜான் சலித்து கொண்டான் .

ஒரு பெரு மூச்சை வெளியிட்டவன் " என்னக்கு தெரில . அவுளுக்கு எதுக்கு ஹெல்ப் பண்றோம்னு தெரில . பட் அவளுக்கு ஹெல்ப் பண்ணனும்னு மனசு சொல்லுது . " சூர்யா .


" ஆங் . இவருக்கு மனசு மட்டுல்ல , கண்ணு , மூக்கு , வாய்னு எல்லாம் சொல்லும் . போடா . வந்துட்டான் , யாரு காதுல பூ சுத்துர . நீ எதையோ மறைக்குற . அது மட்டும் நல்லா தெரியுது . அது என்னன்னு நீ சொல்ற அப்போ சொல்லு . " என்ற ஜான் எழுந்து சென்று விட்டான் .


ஆம் உண்மை தான் . அவன் ஒரு விஷயத்தை மறைத்து கொண்டிருக்கிறான் . அந்த விஷயம் வெளி வரும் போது என்ன நடக்கும் என்பதை அவள் மட்டுமே அறிவாள் .

ஜானை பின் தொடர்ந்து விஷ்வாவும் எழுந்து சென்று விட , சூர்யா எப்போதும் போல் யோசனையில் ஆழ்ந்தான் . அவன் மனதுக்குள் அது மட்டும் நடந்து விட கூடாது என்று ஜபித்து கொண்டிருக்கிறான் . அவன் கனவில் கண்ட காட்சிகள் அப்படி . அந்த காட்சிகளை பார்த்ததில் இருந்து அவன் மனதினுள் எப்படியாவது நிலாவை காப்பாற்ற வேண்டும் என்ற வெரி எழுந்தது . மெதுவாக கண் மூடினான் . அவன் கண் முன் ஏதேதோ காட்சிகள் உருண்டோடின . தலை வின்னென வலிக்க கண்ணை திறந்தான் அவன் . அவனின் கண்கள் இரண்டும் வாட்டர் மிலன் போல் சிவந்து இருந்தது . " எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது . நா என்ன பண்ணேன் . ஏன்டா பொறந்தோம்னு இருக்கு . " மனதினுள் கூறி அழுதான் சூர்யா .

கொஞ்சம் சூர்யாவை பற்றி பார்ப்போம் :

சிறு வயதிலிருந்தே தாய் யார் தந்தை யார் என்று அறியாமல் வளர்ந்தவன் . அவனுக்கு மட்டுமல்ல அவனின் தந்தைக்கும் அவரின் தாய் தந்தையை பற்றி தெரியாது . சிறு வயது முதலே அந்த காட்சிகள் அவன் கணவில் வரும் . அதை அவன் புரக்கனிப்பான் . ஆனால் வயது ஏற ஏற அவன் கணவில் வரும் காட்சிகள் கண்ணை மூடினாலே வர தொடங்கியது . முதலில் தெளிவாக இல்லாத அந்த உருவங்கள் நாட்கள் நகர நகர தெளிவாக தெரிந்தது . அதில் ஒன்று தான் நிலா . நிலாவின் உருவமும் அவன் கண்ட காட்சிகளில் ஒன்று . அந்த காடு , என அனைத்தும் . முதலில் இது அவனின் ப்ரம்மை என்று நினைத்தான் . ஆனால் போக போக தான் தெரிந்தது , அது ப்ரம்மை அல்ல . நடக்க போகும் நிகழ்வுகள் அவன் கண் முன் வருகிறது என்று . அவன் இந்த காட்டுக்கு வருவான் என்று அவனுக்கு சிறு வயதிலே தெரியும் . அதுவும் நிலாவும் வருவாள் என அவன் எதிர் பார்க்கவில்லை . இனி என்னவெல்லாம் நடக்க போகிறது என்று வருமென என்னினான் . ஆனால் அவனுக்கு வேறு ஏதோ காட்சி தான் வந்தது .



சூர்யா அப்படியே அமர்ந்து விட்டான் .


★★★★★★★★★★★★

" ஹௌவ் இஸ் திஸ் பாஸிபில் . " க்லாய்ஸ்.

" டோன்ட் நோ சார் . " விமல் .

" வாட் . ஒரு ஊருய்யா . என்ன நெனச்சுட்டு இருக்கிங்க மனசுல . இந்த உலகத்த கன்ட்ரோல் பன்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமாய்யா உனக்கு . எதுவும் தெரியாதவனையெல்லாம் வேலைக்கு வச்சுருக்காங்க பாரு அவன சொல்லனும் . அந்த ஊர்ல என்ன ஆச்சுன்னு போய் பாரு . முன்னாடியே ஒரு ஊர் நம்ம கன்ட்ரோல்ல இல்ல . அத மத்தவங்களுக்கு தெரியாம வச்சுக்கவே நரையா பொய் சொல்லியாச்சு . இதுல இது வேற . மனுஷன கடுப்பேத்தவே வர்ராங்க சாமி . " என்றுவன் அவனை பார்த்து " என்ன டா என்னோட மூஞ்சிய பாத்துட்டு இருக்க . போய் வேலைய பாரு போ . வந்துட்டான் . " என்று திட்டினான் க்லாய்ஸ் .


அவனும் வேறு வழியின்றி சென்று ஒரு எங்கே தவறு நிகழ்ந்தது என்று பார்த்தான் . அப்படி பார்த்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மின்னல் வெட்ட பதறி போன அவன் அப்படியே மயங்கி சரிந்தான் .

இங்கே க்லாய்ஸோ ஒருவனிடம் அமர்ந்து புலம்பி கொண்டிருந்தான் .
" நம்ம கவர்ன்மன்ட் பண்ணது மட்டும் வெளிய தெரிஞ்சுது , செத்தான் சிவனான்டி மாதிரி தான் . அவ்ளோ தான் கதை . இங்க இருக்குற மக்களே கவர்ன்மென்ட தூக்கி சாப்ட்ருவாங்க . என்ன பண்றது . எல்லாம் விதி . " என்றான் க்லாய்ஸ் .

அப்போது ஒருவர் ஓடி வந்து " சார் . இப்போ எதுவுமே நம்ம கன்ட்ரோல்ல இல்ல . என்ன பண்றதுனே தெரியல சார் . " என்றார் .

" என்னய்யா சொல்ற . " க்லாய்ஸ் .

" ஆமா சார் . நம்ம நெட்வர்க்ல ஏதோ ப்ராப்லம் சார் . அதுனால உலகம் இப்போ செயலழந்துடுச்சு சார் . " என்றார் அவர் .

" அப்போ இயற்கையா மாறிடுமா எல்லாம் . " க்லாய்ஸ் .

" ஆமா சார் . " என்றார் பயந்து கொண்டே .

" அப்போ நம்மெல்லாம் சாக வேண்டியது தான் . உலகம் அழிய போகுது . " க்லாய்ஸ் .

" சார் இப்போ என்ன சார் பண்றது . " அவர் .

" வேற வழி . போய் சாக வேண்டியது தான் . " என்று அவன் கூறி கொண்டிருக்கும் போதே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது . அனைத்தும் கிடுகிடுவென ஆட பலர் அதனால் உண்டான பயத்திலே மயங்கினர் . க்லாய்ஸ் அங்கியுந்து தப்பிக்க எவ்வளவோ முயன்று பார்த்து விட்டான் . ஆனால் முடியவில்லை . அவனின் தலை மேல் ஒரு பெரிய கல் வந்து விழுந்து தலை சிதைந்து இறந்தான் அவன் . அவனின் மூளை வெளியே வந்து விழுந்திருந்தது . அங்கு இருப்பவர்கள் தப்பிக்க முயற்சி செய்கையில் அந்த மூளை மீது ஒருவர் காலை வைத்து விட அது அப்படியே நசுங்கி போனது .


ஜீவாவின் வீட்டில் அனைவரும் கவலையுடன் அமர்ந்திருக்க , அப்போது காற்று பலமாக வீச தொடங்கியது . ஜீவா பயந்து போணான் . மீண்டும் அவள் வந்து விடுவாளோ என்று . ஆனால் அவள் வரவில்லை , மாறாக புயலின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது . அனைவரும் அந்த புயலில் சிக்கி இறந்தனர் .


★★★★★★★★

- பேயின் ஆட்டம் தொடரும் .


© Ashwini