...

10 views

இறைவனை தொழுதேன்
இன்றும் மனது சரியில்லை. மனைவிக்கு உடல் நலமில்லை. காலையில் நன்றாக இருக்கிறாள். இரவில் லேசாக காய்ச்சல் தொடர் இருமல். எனக்கு தாங்க முடியவில்லை. அழுகை அழுகையாக வருகிறது. ஆண்டவனிடம் அழுது வேண்டுகிறேன். அவள் சீக்கிரம் உடல்நலம் பெற வேண்டும் என்று சிவபுராணம் படிக்கிறேன். இருமல் சத்தம் குறைகிறது. லேசாக தூங்க ஆரம்பித்து விட்டாள். இறைவனுக்கு நன்றி. ஆண்டவா அவள் முழுமையாக குணம் அடைய வேண்டும். இனி அவள் வாழ்வில் சந்தோஷம் மட்டுமே இருக்க வேண்டும்.