...

3 views

❤️தீராத காதல்-4 ❤️
இந்த கொடிய சம்பவத்தினால் அவளின் வாழ்க்கை நிற்கெதியாய் ஆனது....அவளும் அன்றோடு அந்த ஊரை விட்டு தனது தம்பி கண்ணனுடன் சென்னைக்கு வந்துவிட்டாள்.அன்று முதல் அவளின் வாழ்க்கையை இருபிள்ளைகளுக்காவே வாழ முடிவு செய்தாள்.சென்னைக்கு வந்து தம்பி வீட்டில் தங்கினாள், கண்ணன் மூவரையும் நன்றாக பார்த்துக் கொண்டான்.இவளும் சில தேவைக்காக அக்கம் பக்கம் உள்ள வீட்டில் வேலைக்கு சேர்ந்து பிள்ளைகளை பார்த்து கொண்டாள்.கண்ணன் மறுத்தும் கேட்கவில்லை... இப்படி நான்கு ஆண்டுகள் போக கண்ணனுக்கு திருமணம் ஆனது அதோடு அமெரிக்காவில் வேலையும் கிடைத்ததால் தனது வீட்டில் அக்காவை தங்க சொல்லி விட்டு அவனும் மனைவியும் அமெரிக்கா சென்றுவிட்டனர்.மாத மாதம் அவனும் தன்னால் முடிந்தவரை பணம் அனுப்புவான் இவளும் எப்படியோ இரண்டு பேரையும் படிக்க வைத்துவிட்டால்...தற்பொழுது ரேணு படித்துமுடித்து விட்டு நல்ல வேலையில் உள்ளாள் ,பவி படித்துக்கொண்டு இருக்கிறாள்.இவளும் இப்போது வேலைக்கு செல்வது இல்லை.ஆனாலும் இருவரின் எதிர்காலத்தை பற்றிய கவலைகள் அவளைவிட்டு போகவில்லை.....இப்படி பல எண்ணங்கள் அவளின் மனதில் ஓடிக்கொண்டிருக்க வீட்டினுள் கைபேசி ஒலித்தது வாசலில் இருந்து உள்ளே சென்று பார்க்கிறாள் கண்ணன் தான் அழைத்திருக்கிறான்.இருவரும் நலம் விசாரித்தனர் கண்ணனுக்கு 5 ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளாள். இப்படி பேசிக்கொண்டு இருக்க ரேணுக்கு நல்ல வரண் பார்க்க சொல்லி தம்பியிடம் கூறினாள்.... அவனும் சரியென்று கூற இருவரின் உரையாடல் தொடர்ந்தது........
.
.
.
.
தொடரும் ✍️