...

8 views

தங்கமீன் என் செல்லமே...
தங்கமீனாக
இருப்பதால்
உன்னை
தொட்டியில்
வைத்தனறோ
அழகென்றால்
சிறைவாசம்
என்றுணர்த்த...




மைதிலி வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து வீட்டு பாடம் செய்து கொண்டு இருந்தாள் . அங்கு இருந்த மீன் தொட்டியில் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்த வண்ண மீன்களை அவள் பார்த்ததும்
இந்த வரிகள் தோன்றியது உடனே தன் நோட்டு புத்தகத்தில் எழுதினாள் அதை .


ஆம் மைதிலி ஏழாம் வகுப்பு படிக்கும் சிறு பெண் . உயர் மட்ட வசதி நிறைந்த குடும்பத்து குழந்தைகள் படிக்கும் பள்ளியில் தான் மைதிலியும் கல்வி கற்றாள் . ஆனால் அவளுக்கு இருக்கும் மனக்குறை


தாய் தந்தை இருவரும் வேலைக்கு செல்பவர்கள் . பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தால் வீட்டில் வேலை பார்க்கும் வசந்தி பாட்டி தரும் காம்ப்ளான் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு வீட்டு பாடம் செய்வது தினம் அவளது வழக்கமான வேலை .


பள்ளி சீருடை மாற்றவும் சில நேரம் மறந்து விடுவாள் மைதி . அந்த மீன் தொட்டி தான் அவளது விளையாட்டு தோழிகள் .
பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அதனுடன் பேசுவாள் .


வீட்டின் வெளியே சென்று விளையாட அனுமதி இல்லை அவளுக்கு . பாடங்கள் முடிந்ததும் சிறிது நேரம் தோட்டத்தில் சைக்கிள் ஓட்டுவாள் .


அப்போது வசந்தி பாட்டியின் பேத்தி யாமினி வருவாள் அவளுடன் சிறிது நேரம் பேசுவாள் அதை அவள் அம்மா சங்கீதா பார்த்துவிட்டால் அவ்வளவு தான் தாம் தூம் என்று குடிப்பார் .


தன் அன்பு மகள் தனிமை அவளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை அறியாமல் இல்லை அவர் .


சமீபத்தில் வெளிவரும் செய்திகள் அவரை இந்த அளவுக்கு பெண்ணிடம் கண்டிப்பு காட்டா செய்தது .


மைதிலியின் தந்தை சேதுராமன் வியாபாரம் தொழில் என்று எந்த நேரமும் பிஸினஸ் மீட்டிங் பேர்வழி .


அன்றும் அப்படி தான் வீட்டு பாடங்களை முடித்து கவிதையும் எழுதிவிட்டு வாசற் புறம் யமுனாவின் குரல் கேட்டதும் அப்படியே தன் நோட்டு புத்தகங்களை வைத்துவிட்டு சைக்கிள் பழக ஓடிவிட்டாள் .




மைதியின் அம்மா அன்று விரைவிலேயே வீடு திரும்பியிருந்தார் தலை வலி காரணமாக .


வீட்டுக்குள் நுழைந்தவர் மைதி அங்கு இல்லாததையும் அவள் புத்தகங்கள் அங்கு இருப்பதையும் பார்த்து விட்டு .




வசந்தியம்மா மைதி எங்கே?.... சூட் ஒரு கப் காபி தாங்களேன் என்று சோபாவின் மறுபுறம் அமர்ந்தாள் மைதியின் அம்மா .




வசந்தி காஃபி கப்புடன் வந்தவர் பாப்பா இங்க தானே மா..இருந்துச்சு எங்க போனாங்க ... என்று தோட்டத்தில் மைதிலியை தேடி சென்றார் .




பாப்பா அம்மா வந்துட்டாங்க வாங்க என்று அழைத்தார் .


மைதியின் அருகே தன் பேயர்தி யமுனாவை பார்த்ததும் நீ...எதுக்கு இங்க வந்த முதலாளி அம்மா பார்த்தாங்க னா திட்டுவாங்க என தன் பேயர்த்தியை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்க . யமுனாவால் மைதிலி திட்டுகள் வாங்க நேரிடுமே என்ற வருத்தம் வசந்திக்கு.


எனவே தன் பேயர்திதியிடம் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்தாயா.
நீ எதற்கு இங்க வந்த க்ஷஉன் வீட்டு பக்கத்தில் இருக்கும் கவிதாவுடன் விளையாட வேண்டியது தானே என யமுனாவை கண்டித்தார் வசந்தி .


பாட்டி கவிதா ஊருக்கு போயிருக்கா . அம்மா இந்த மாத்திரையை உங்களுக்கு தந்துட்டு வர சொன்னாங்க அதற்கு தான் வந்தேன் பாட்டி என்று பதில் தந்தாள் யமுனா .


சரி சரி...கொடுத்துட்ட இல்ல கிளம்பு என்று அவசர படுத்தினார் வசந்தி யமுனாவை .




வீட்டினுள் காஃபி அருந்திய சங்கீதாவுக்கு கொஞ்சம் தலைவலி குறையவே அருகில் இருந்த மகளின் புத்தகத்தை பார்வையிட்டார் .




அழகான முத்து முத்து கையெழுத்து அனைத்து பாடங்களையும் தேதி வாரியாக முடித்திருந்தாள் மைதி .




தன் மகள் படிப்பில் என்றும் முதலிடம் தான் என்று பெருமை கொண்டவர் அடுத்த பக்கத்தில் மைதியின் கவிதையை பார்த்ததும் சங்கீதாவின் மனம் ச்சே..குழந்தையை இந்த தனிமை எந்த அளவு பாதித்து விட்டது நானும் வேலை வேலை என்று அவளை கவனிக்க தவறிவிட்டேன் என்று நினைத்து மகளை பார்பதற்கு தோட்டத்திற்கு வந்தார் சங்கீதா .




அந்த சமயம் தான் யமுனாவை விரட்டி கொண்டு இருந்தார் வசந்தி .




இரு குழந்தைகளும் தங்களின் சிறு சந்தோஷம் கூட நிலைக்கவில்லை மே என்று பரிதாபமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர் .




பின்புறம் வந்து கொண்டிருந்த சங்கீதா இதை பார்த்தது கொண்டே வந்தவர் வசந்தி மா யமுனா இனி இங்கு வரட்டும் இரண்டுபேரும் விளையாட்டும் .




பாவம் குழந்தைகள் இந்த வயதில் தான் விளையாட முடியும் என்று சொல்லவும் மைதிலி தன் அம்மாவை நம்பமுடியாத பார்வை பார்த்தவள் ஓடிவந்து சங்கீதாவை கட்டி கொண்டு தாங்ஸ் மாம் என்று கன்னத்தில் முத்தம் வைத்தாள் .


சரி சரி ஆனா ஹோம் வொர்க் முடித்த பின்னர் தான் விளையாட்டு சரியா 1 ஹாவர் ஓ.கே பேபி என்று மகளையும் யமுனாவையும் விளையாட சொல்லிவிட்டு அங்கு போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தார் .


தங்க மீன்கள் இரண்டு பட்டாம்பூச்சிகள் போல் ஓடி ஆடி விளையாடுவதை .


முற்றும்.



© piyu