![...](https://api.writco.in/assets/images/post/user/poem/1051221229061240233.webp)
6 views
நின்னை ஒரு வரம் கேட்பேன்
அறிவு இழந்தவர்கள் நட்பில் நாளும்
கதை பேசி
அன்றாடமும் உழைப்பை நினைக்காமல் வாழ்ந்து மடியும்
குற்றத்தை வெறுத்து ஒதுக்க
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
மாதர்கள் காம பிசாசுகளின் வன்முறையில் அல்லல்படுவதை அறவே ஒழித்து
மாதர்கள் புறவாழ்வில்
போரிட்டு ஆணாதிக்க கிரீடத்தை கீழறக்கி
அநீதிகளை ஒழித்து நீதியினை நிலைநாட்ட
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
அம்பலத்தை அகிலமெங்கும் கூட்டி
அங்கெல்லாம் தமிழ் விதைகளை
தூவி
எங்கும் தமிழே நிலைக்கச் செய்யும்
ஆற்றலை வேண்டி
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
ஊர் முழுக்க திரிந்து நாள் முழுக்க வாடி
ஊமையாகி குருடாகி செவிடாகி
தனியாகி
காலனடி சேராமலும் அல்லலாடும் நிலை வாராமலிருக்க
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
மங்கையர்கள் மனைவாசல் தேடித் தேடி
மானேத் தேனே பாடி மகிந்துடல்
பசியாறத் அழைக்கும் மனம்
தூரத்தே போக
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
கேட்டவரமெல்லாம் இப்போதே தந்திட
வந்திடு எந்தாயி வரம் தரும் மகமாயி
ஆடிவரும் பெரியாயி எந்தாயி.
- சங்கத்தமிழன் மணி
கதை பேசி
அன்றாடமும் உழைப்பை நினைக்காமல் வாழ்ந்து மடியும்
குற்றத்தை வெறுத்து ஒதுக்க
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
மாதர்கள் காம பிசாசுகளின் வன்முறையில் அல்லல்படுவதை அறவே ஒழித்து
மாதர்கள் புறவாழ்வில்
போரிட்டு ஆணாதிக்க கிரீடத்தை கீழறக்கி
அநீதிகளை ஒழித்து நீதியினை நிலைநாட்ட
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
அம்பலத்தை அகிலமெங்கும் கூட்டி
அங்கெல்லாம் தமிழ் விதைகளை
தூவி
எங்கும் தமிழே நிலைக்கச் செய்யும்
ஆற்றலை வேண்டி
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
ஊர் முழுக்க திரிந்து நாள் முழுக்க வாடி
ஊமையாகி குருடாகி செவிடாகி
தனியாகி
காலனடி சேராமலும் அல்லலாடும் நிலை வாராமலிருக்க
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
மங்கையர்கள் மனைவாசல் தேடித் தேடி
மானேத் தேனே பாடி மகிந்துடல்
பசியாறத் அழைக்கும் மனம்
தூரத்தே போக
நின்னை ஒரு வரம் கேட்பேன்,
கேட்டவரமெல்லாம் இப்போதே தந்திட
வந்திடு எந்தாயி வரம் தரும் மகமாயி
ஆடிவரும் பெரியாயி எந்தாயி.
- சங்கத்தமிழன் மணி
Related Stories
6 Likes
1
Comments
6 Likes
1
Comments