...

8 views

எல்லாமுமாய்!
எது நான் எது நீ நிலைக்கும் குழப்பம்
புரியா நெருக்கம் உயிரில் சுரக்கும்
மனமோ மறைக்கும் தவமே உரைக்கும்

நீரே கருவாகி, நிலமே உடலாகி
நெருப்பே உயிராகி வெளியில் தடம் பதித்த
நான்....நீயோ!

வடிவற்ற நீரை போல என் மனது
வலுபெற்ற பூமியாய் என் இதயம்
வரையறையற்ற வெளியாய் என் எண்ணங்கள்
வருத்தமற்ற நெருப்பாய் என் கோபம்
வன்மமற்ற காற்றாய் என் அன்பு
உன்னை போல ஒரு நாள் என் வாழ்வில்
உண்மையோடு கலப்பது என் ஆசை

எனக்குள் நீ முழுமையாய்
உன்னோடு நானும் முழுமையாய்
என்றென்றும் நிலைத்திருப்பாய் நீ மட்டும்
பாதியில் பிரிந்திடும் நான் என்னும் மாயம்
அறியாமல் ஐந்தாய் கை கோர்ப்பேன்
அந்நாள் வரை அன்பர்கள் உம்மை
உருமாற்றி உயிர் பிரிக்கா வரம் வேண்டும்