...

1 views

யார் நான் ?
நேசிக்க மறந்த
நேசர்களை
யாசிக்க விரும்பாத
நான் யார்?

யோசிக்க வைக்கும்
நினைவுகளை
வாசிக்க முடியாத
நான் யார்?

பாசிக்கு நடுவில்
ஊசி நூலால்
பேசிக்கொள்ளும்
உறவா?

விளங்காத
மனிதர்களால்
வேசிக்கும் தாசிக்கும்
வேறுபாடு அறியாத முறையா?

பூசிக்கொள்ளும் சாயத்தில்
நாசிக்கு நடுவில் ஒட்டப்படாத
சின்னதொரு இடைவெளியில்
சித்தரிக்கப்படும் சீர்கேடா?

பேசி கொண்ட
பொழுதில்
கூசி நின்ற தயக்கத்தில்
கேட்டதைக் கொடுக்காத குறையா?

ஒற்றனா
சித்தனா
உளவியல் ரீதியில்
உருமாறிய பித்தனா?

புத்திக்குப் புகைமூட்ட
பக்தியைக் கைகாட்டி
சக்தியைச் சரணடையச் சொல்லும்
சதிகார மனிதனா?

#தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழ்கவிதைகள் #தமிழ்கவிதை #தமிழ்வரிகள் #aaram_viral #tamilquotes

© aV ​✍🏾