17 views
என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா...?
எவருக்கும் காட்டா முகம்
எனக்கு காட்டிப் போனாய்...
எவருக்கும் வீசாத பார்வையை
என் மீது வீசிப் போனாய்...
எவரும் காட்டாத நேசம்
என் மீதுகாட்டிப் போனாய்..
எவரும் வைக்காத நம்பிக்கையை
என் மீது வைத்து போனாய்..
நான் நானாக இருப்பதற்கு
நீ நானாகி போனாய்...
ஆறுதல் தேடி தொலைகையில்
தோள் தந்து போனாய்....
மனம் துவழும் வேளையில்
மடி தந்து போனாய்...
பிடித்தத்திற்கும் பிரிவிற்கும்
இங்கு சம்பந்தமில்லை கண்ணம்மா...
பிரிவிற்கும் பின்னரும் பிடித்தமொன்றில்
நிலைத்திருக்க உன் காதல் போதும்...
உன்னை ரொம்ப பிடிக்கும்
இப்போ வரைக்கும்...
நீ எனதில்லாமல் போனாலெல்ல
இந்தக் காதலும் நேசமும்
எப்பொழுதும் எனதே எனது...
© நித்திலன்...🎭
Related Stories
17 Likes
2
Comments
17 Likes
2
Comments